Posts

Showing posts from June, 2021

நினைவுதிர்காலம் - யுவன் சந்திரசேகர்

______________________________ நினைவுதிர்காலம் (யுவன் சந்திரசேகர்) _______________________________        இப்புதினத்தின் மையம் இசை. இசையின் விரிவையும், ஆழத்தையும் தனது சுயமாக்கிக் கொண்டு வெற்றி பெற்ற கலைஞனின் வரலாறு.        ஆசிரியர் இதற்குமுன் எழுதிய "கானல் நதி " புதினத்தின் தொடர்ச்சியாகக்கூட இந்நூலைக் கொள்ளலாம்.         இசைக்காகத் தன்னை அழித்துக் கொண்ட கலைஞனின் கதை  "கானல் நதி " என்றால் ... இசையின் மூலம் தன்னை உயர்த்திக் கொண்ட கலைஞனின் கதை "நினைவுதிர் காலம் "...        முன்னது தோல்வி அடைந்தவனின் நற்செய்தி .. இரண்டாவது வெற்றியாளனின் வரலாறு...              (விலை : ரூ 230)              (காலச்சுவடு பதிப்பகம்)

வால்காவிலிருந்து கங்கை வரை(ராகுல் சாங்கிருத்தியாயன்)தமிழில்... கண.முத்தையா

_______________________________ வால்காவிலிருந்து கங்கை வரை (ராகுல் சாங்கிருத்தியாயன்) தமிழில்... கண.முத்தையா ________________________________        இந்தியாவில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திய புதினம்.மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் இவைகளை 20 கதைகளாகப் படைத்துள்ளார் ராகுல்ஜி.         இவைகள் வெறும் கதைகள் அல்ல.சரித்திரத்தைப் படிக்கும் சலிப்போ... தத்துவத்தைக் கற்கும் சிரமமோ... இல்லாமல் வெகு இயல்பாக சுவையான நடையில் மனித நாகரீகத்தைக் கூறும் அறிவுப் பெட்டகம் இந்நூல்.         கதைமாந்தர்களின் வழியாய் தன் கருத்துகளைத் தர்க்கரீதியாக விளக்குகிறார் ஆசிரியர்.         கி.மு 6000 ல் துவங்கும் முதல் கதை, இருபதாவது கதையாக கி.பி 1942 ல் முடிகிறது.                 (விலை : ரூ 350)                 (தமிழ்ப் புத்தகாலயம்)

தூர்வை - சோ.தர்மன்

______________________________ தூர்வை (சோ.தர்மன்) _______________________________         இப்புதினத்தை வாசிக்கும் போதே அந்தக் கதைக்களத்தின் கரிசல் காட்டின் வெம்மையும், நீர்மையும் நம்மேல் ஒட்டிக் கொள்ளும்.        கரிசல்பூமி கந்தக பூமியானக் கதை. விவசாயத்தை விட்டுவிட்டு, சம்சாரி தீப்பெட்டித் தொழிற்சாலையின் காவலாளியாய் போனதை இயல்பாய்.. அழகாய்..காட்டோடை போல சிலுசிலுத்து நம்மை ஈர்க்கும் கதை.        கதையைப் படித்து நெடுநாள் ஆனாலும் மினுத்தான் - மாடத்தி தம்பதியர் நம் மனதில் என்றும் நிற்பார்கள்.        விவசாய குடும்பங்கள் மடத்தில் கதையளப்பது.. சிலம்பம் பழகுவது.. கும்மியாடுவது.. அதையும் தாண்டி நேர்த்திக்கடன் தீர்க்க வண்டிகட்டி குடும்பம் குடும்மாகப் போவது .. இதையெல்லாம் வாசிக்கும் போது காலம் மாறிப்போனதை எண்ணி மனம் ஏங்கும். வாசிக்க வாசிக்க கரும்புச்சாறு போல் ஈர்க்கும். சொல்நடை வியக்க வைக்கும்..            (விலை : ரூ 230)            (அடையாளம் பதிப்பகம்)

ருத்ரவீணை - இந்திரா சௌந்தர்ராஜன்

______________________________ ருத்ரவீணை (இந்திரா சௌந்தர்ராஜன்) ______________________________        தோடிபுரம் என்னும் ஊரும், அந்த ஊரில் ஓயாமல் ஒலிக்கும் ருத்ரவீணையின் நாதமும், அதைப் போற்றிப் பாதுகாக்கும் தேவரடியார்களும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியங்களும் தான் இக்கதை..        ருத்ரன், நிலவறை, இயற்கையே மாற்றும் வீணையின் நாதம், நவகிரகக்கிணறு என்று நம்பமுடியாத பல்வேறு அமானுஷ்ய திருப்பங்களுடன்.. விறுவிறுப்புடன் செல்லும் கதையமைப்பு வாசிப்பவரைக் கட்டிப்போடும்.. ருத்ரவீணையின் இனிய நாதத்தை அனைவரும் ரசிப்போம்...    (விலை : முதல் பாகம் ரூ 305 ,            இரண்டாம் பாகம் ரூ 340 )                    (திருமகள் பதிப்பகம்)

பொன்னியின் செல்வன் - கல்கி

_______________________________ பொன்னியின் செல்வன் (கல்கி) ________________________________         கல்கி அவர்கள் எழுதிய புகழ் பெற்ற புதினம்.1950 - 1955 வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து வாசகர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது.       இப்புதினம் புதுவெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.300 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.         கி.பி 1000 ஆண்டுவாக்கில் இருந்த சோழப்பேரரசை அடிப்படையாகக் கொண்டு, கற்பனைக் கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்.        பொன்னியின் செல்வன் இராஜராஜசோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்களுள் ஒன்று. கதாநாயகன் வாணர் குலத்தலைவன் வல்லவரையன் வந்தியத்தேவன். இப்புதினத்தை படித்து முடிக்கும்வரை சோழநாட்டில் நாம் வாழ்வது போன்ற .. உலாவுவது போன்ற.. உணர்வு ஏற்படும்.. பல இலக்கிய ஆர்வலர்களின் கருத்தும் இதுவே..        படித்து முடித்த பிறகு அக்காலத்தில் குந்தவை பிராட்டிக்கு ஒரு சேடிப்பெண்ணாக மட்டுமாவது வாழ்ந்திருக்கலாமே என...

நான் அதுவல்ல - உஷாதீபன்

________________________________ நான் அதுவல்ல (உஷாதீபன்) ________________________________       இப்புத்தகத்தில் 19 சிறுகதைகள் உள்ளன. நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், குடும்பங்கள், அலுவலகம் இவற்றை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.       "தன்னில் கரைந்தவர் " அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள தொழிற்சங்கவாதியின் கதை.       "கல்லை மட்டும் கண்டால் " புத்தக வாசிப்பில் வாசிப்பு அனுபவமிக்க ஒரு முதியவர் மூலம் சொல்லும் கதை.தான் சேர்த்து வைத்துள்ள புத்தகங்களை பழைய பேப்பர் கடைக்குப் போட்டுவிடக்கூடாது என்று புத்தக மூட்டையைச் சுமந்து சென்று நூலகத்தில் ஒப்படைக்கும் அவர் புத்தகங்களைப் பற்றி பேசுதல் அருமை.       காவல்,பிரகரதி,வெள்ளாடு எல்லா கதைகளுமே அருமை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் உள்ளத்தைத் தொடும்.                (விலை : ரூ 150)       (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

விரலால் சிந்திப்பவர்கள் - ச.சுப்பாராவ்

______________________________ விரலால் சிந்திப்பவர்கள் (ச.சுப்பாராவ்) _______________________________       ஆசிரியர் வாசிப்பை தனது வாழ்வின் ஒரு பகுதியாகக் கொண்டவர். தான் தேடித்தேடி வாசித்த வாழ்க்கை வரலாற்று நூல்களைமிகச் சுருக்கமாக "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற பெரு நோக்கில் இந்நூலைத் தந்துள்ளார்.        21 எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஐசக் அசிமோவ், புதுமைப்பித்தன், கல்கி, பம்மல் சம்மந்த முதலியார், உ.வே.சா, சி.சு.செல்லப்பா, அலெக்சாண்டர் டூமாஸ், வாசுதேவன் நாயர் ஆகிய பெரியோர்களின் படைப்புகள் குறித்த முக்கிய வரலாற்றுச் செய்திகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.        வாசிப்பை ஊக்குவிக்கும் நூல்களில் முதன்மையான நூல் இது..            (விலை : ரூ 90)            (பாரதி புத்தகாலயம்)

மலரும் மாலையும் - கவிமணி தேசிய விநாயகம்

_______________________________ மலரும் மாலையும்  (கவிமணி தேசிய விநாயகம்) ________________________________        பழந்தமிழ்ப் பண்பும், தமிழ் மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களை கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பே "மலரும் மாலையும் " என்னும் இந்நூல்.         இந்நூலில் உள்ள பாடல்கள் மூலம்.. கவிமணியின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறை வழிபாடு, சாதி பேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று இவற்றை அறியலாம். "பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன் பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான் அடா கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா - அந்த கிறுக்கில் உளறும் மொழி பொறுப்பாயடா.."                  (விலை : ரூ 275)                  (சாரதா பதிப்பகம்)

துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்

_______________________________ துயில் (எஸ்.ராமகிருஷ்ணன்) _________________________________         மனிதன் மிகவும் அஞ்சுவது நோய்களுக்குத் தான்.எல்லா நோயும் தனியே வருவதில்லை.கூடவே பயமும் நிச்சயமின்மையும் சேர்ந்தே வருகின்றன.        மனிதன் நோயின்மீது கொண்டிருக்கும் எண்ணத்தை அற்புதமாகச் சொல்வதுடன் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை அழகாகச் சொல்லும் புதினம் இது.       இப்புதினத்தில் வரும் ஒவ்வொரு நோயாளியும்.. அவர்களின் கதைகளும் .. நமக்கான எச்சரிக்கைகள்.        கதாப்பாத்திரங்கள் சின்னராணி, செல்வி, ஏலன் பவர், அழகர் என்று பலர் நம்மில் ஒருவரே..        நோய்மையோடு தொடர்புடைய வரலாற்றை ..சமூக உளவியல் பார்வையில் தன் வசீகர மொழிநடையில் ஆவணப்படுத்தியுள்ளார் எஸ்.ரா அவர்கள்.. தத்துவார்த்தமான.. கவித்துவம் நிறைந்த நாவல்.. "துயில் " வாசிப்பவரை விழிப்படையச் செய்யும்..              (விலை : ரூ 500)              (தேசாந்திரி பதிப்பகம்)

வார்த்தை தவறிவிட்டாய் - தமிழ் மதுரா

_______________________________ வார்த்தை தவறிவிட்டாய் (தமிழ் மதுரா) _______________________________        மதுராவின் கைவண்ணத்தில் இப்புதினம், திருமணமானப் பின்பான தனிமனித நேர்மையைப் பேசுகிறது.        இதில் சத்தியம் என்னும் வார்த்தை பற்றிய விளக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.        காப்பாற்ற முடியாத பலவீனமான மனதுடையவர்கள் தரும் தவறான வாக்குகள் அடுத்த தலைமுறையினரை எப்படி சிதைக்கிறது என்பதே கதை..               (விலை : ரூ 150)        (அறிவு நிலையம் பதிப்பகம்)

எனக்குள் இருப்பவள் - பிரபஞ்சன்

________________________________ எனக்குள் இருப்பவள் (பிரபஞ்சன்) _________________________________      இரண்டு குறுநாவல்களைக் கொண்ட நூல். ஒன்றுக்கொன்று மாறுபட்ட பரிணாமங்களைக் கொண்டவை.        மூன்று கதாப்பாத்திரங்களைக் கொண்டு நடைமுறை வாழ்வில் நடைபெறும் நிகழ்வை மிக நேர்த்தியாக அலசப்பட்ட குறுநாவல்.       ஹேமா, கிருஷ்ணமூர்த்தி தம்பதியர் வாழ்வில் நிகழும் சம்பவங்களே கதைக்களம்.        இரண்டு குழந்தைகள் பிறந்தபின் 40 வயதிற்கு மேல் கணவன் மனைவியிடையே நிகழும் மாற்றங்களை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் பிரபஞ்சன் அவர்கள்.                   (விலை : ரூ 70)                   (கவிதா பதிப்பகம்)

வில்லோடு வா நிலவே - கவிப்பேரரசு வைரமுத்து

_________________________________ வில்லோடு வா நிலவே - கவிப்பேரரசு வைரமுத்து __________________________________         கவிஞரின் சொல் ஆளுமை.. உரைநடையும் கவிதையும் கலந்தது போல ஒரு உணர்வைத் தரும்.         இளவரசன் ஒருவனின் காதல் வாழ்க்கையை முன்னிலைப் படுத்தி அதனூடே சேர அரசின் தடங்களைத் தொட்டுச் செல்கின்ற ஓடையாக இருக்கிறது இந்நூல்.       சேரர்களுக்கும், கடம்பர்களுக்கும் இருந்த பகை.. யவன அரேபிய நாடுகளுடன் இருந்த வணிகம்.. சேரநாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் செழிப்பு.. ஆகியவற்றை அழகுடன் கூறியுள்ளார் கவிஞர்.        தமிழ் மன்னர்களின் பெருமை என்று முகப்புரை வழங்கி தொடங்கும் கதைக்களம் சில வியப்புகளையும், சில கேள்விகளையும் தருகிறது. பல தேடல்களைக் கொடுக்கும் நூல் இது..                 (விலை : ரூ 175)                 (திருமகள் பதிப்பகம்)

தமிழுக்கு அமுதென்று பேர் - பாரதிதாசன்

________________________________ தமிழுக்கு அமுதென்று பேர் (பாரதிதாசன்) ________________________________         இன்றுள்ள பல மொழிகளுக்கெல்லாம் தமிழே தாய்மொழி என்ற சிறப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமிதத்தையும் பூரிப்பையும் உண்டாக்கும்.         பாவேந்தர் தமிழின் சிறப்புக்களை எல்லாம் நுகர்ந்து, நினைத்து, ஆழ்ந்து பாடுவதில் வல்லவர்.        "தமிழுக்கு அமுதென்று பேர்! அந்தத் தமிழ்  இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் " என்று பாடிய பாரதிதாசன் அவர்கள் தமிழின் சிறப்புகளைப் பற்றி பாடிய பல பாடல்களின் தொகுப்பு இந்நூல். "உணவால் உயிர் நிலைக்கும் ;         அந்த உயிரும் அணிதமிழால் ஆகும் ;         அதனால் - பணிமொழியே! செந்தமிழைத் தீர்ப்பாரைத்          தீர்த்தல் முதல் வேலை! சிந்தட்டும் செங்குருதி ஆறு.               (விலை : ரூ 4.50) (1978 ல்)               (பூம்புகார் பிரசுரம்)

வீரயுக நாயகன் வேள்பாரி - சு.வெங்கடேசன்

_________________________________ வீரயுக நாயகன் வேள்பாரி (சு.வெங்கடேசன்) _________________________________         தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்பு வழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ்நிலம் முழுவதும் பரவியது.         மூவேந்தர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.பறம்பின் நீர் வளம் அவர்கள் கண்களை உறுத்தியது.         பாரிக்கு எதிராக அவர்கள் தனித்தனியாக மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. அவர்கள் ஒன்றிணைந்து பாரியின் பறம்புமலையை, பல்வேறு பகுதிகளிலிருந்து தாக்கினர். என்றாலும் குறுநிலமன்னன் பாரியின் படைகள் மூவேந்தர் படைகளைச் சிதறடித்தது.     மூவேந்தரும் ஒன்றாய் சதி செய்து பாரியின் உயிரைப் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகத்தால் சாதித்தனர்.       இயற்கைக்கும், மனிதனின் பேராசைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம் வேள்பாரியின் கதை.      கதையை வாசிக்கும் போது திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில்... அந்த அருவி நீரினும் குழுமை உடைய பாரியின் கரம...

தமிழ் விருந்து - இரா.பி.சேதுபிள்ளை

______________________________ தமிழ் விருந்து (இரா.பி.சேதுபிள்ளை) _______________________________         இலக்கியப் பசி உள்ளவர்களுக்கு, எளிய .. இனிய விருந்து "தமிழ் விருந்து "..       "கலையும் கற்பனையும் " "மணிமேகலையும் மதுவிலக்கும் " "தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும் " "தமிழ் இலக்கியத்தில் கண்ட அரசு " உள்பட 20 கட்டுரைகள் உள்ளன.        சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் ஆசிரியர் பேசிய 18 பேச்சுக்களும், அவற்றுடன் சென்னை மதுவிலக்குச் சங்கத்தில் பேசிய பேச்சின் சுருக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.           தமிழ்க் கலைகளின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை .. நான்கு கூறுகளாக காணப்படுகிறது..         ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் இனிய, எளிய, கருத்தோட்டத்துடன் அமைந்த உரையை நேரில் கேட்பது போன்ற மாயை ஒவ்வொருவரின் மனதிலும் தோன்றும். இதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.. வாசியுங்கள்! இனிய விருந்தை சுவைத்த உணர்வு உண்டாகும்!!       ...

சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் - உமா பாலகுமார்

_________________________________ சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் (உமா பாலகுமார்) _________________________________          உமா பாலகுமார் அவர்கள் சதுரகிரி மலைக்குச் சென்று சிவனை வழிபட்டு வந்த அனுபவங்களே இந்நூல்.       இந்நூலை வாசிக்கும் போது நாமும் அவருடன் சென்று, ஈசனை வணங்குவது போன்ற உணர்வு ஏற்படும்.       சதுரகிரி மலை அடிவாரத்திலிருந்து மலை ஏறுதல் - அத்திரி மகரிஷி வனம் - கோரக்கர் குகை - இரட்டை லிங்கம் சந்நிதி - நாவல் ஊற்று - என்று நாமும் அவருடன் மலைக்குச் செல்கிறோம். இறைவனை பார்த்து வணங்கி வருகிறோம்.         ஆசிரியரின் கவித்துவமான நடையழகும், வாசிக்கும் போது மனம் ஒருநிலைப்பட்டு இறைவன் திருவடி வணங்குதலும் நூலின் வெற்றி..        ஆத்மார்த்தமான பக்தியுடன் நேசித்து, தன்னை உணர வேண்டும் என்று வேண்டுபவருக்கு தன்னை உணர்த்துகிறார் அந்த "ருத்ரன் ".. "அன்பெனும் பிடியில் அகப்படும் மாமலையே ..." என்று அடியார்கள் பாடியது இதைத் தானோ?                   (விலை : ...

கையில் இருக்கும் பூமி(இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - தியடோர் பாஸ்கரன்

________________________________ கையில் இருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்) (தியடோர் பாஸ்கரன்) _______________________________         உயிரினங்கள் - உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் - சூழலியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்பு பிராணிகள் ..சார்ந்து ஆசிரியர் இதுவரை எழுதியுள்ள அனைத்துக் கட்டுரைகளின் முழுத்தொகுப்பே இந்நூல்.        சூழலியல் குறித்து தமிழில் அரிய படங்களுடன் எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த நூலாகும். சூழலியல் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய நூல்.        நாம் வாழும் பூமி மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய நூல்.                   (விலை : ரூ700)                   (உயிர்மை பதிப்பகம்)

சின்னச்சின்ன வெளிச்சங்கள் - வெ.இறையன்பு

________________________________ சின்னச்சின்ன வெளிச்சங்கள் (வெ.இறையன்பு IAS) ________________________________         ஒவ்வொருவரின் வாழ்விலும் தன்னம்பிக்கை என்பது வெற்றியின் திறவுகோல்.       இந்நூல் இளைஞர்களுக்கு நம்பிக்கையைத் தருவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த அடித்தளம் எனலாம்.       இப்புத்தகத்தில் சுமார் 52 தலைப்புகளில் குட்டிக் குட்டி கதைகள் இடம்பெற்றுள்ளன.          ஒவ்வொரு கதையும் சுவாரசியம் மிக்கதாக இருப்பதும், கதையுடன் கருத்தைச் சொல்லும் பாங்கும் அழகிய கவிதை... படிப்பவர் மனதில் வேகமாகச் சென்று இடம்பிடித்துக் கொள்ளும் அருமையுடையது இக்கதைகள்.         மாணவக் கண்மணிகளுக்கு ஏற்றத்தைத் தரும் சிறப்புடைய நூல் இது..                  (விலை : ரூ 60)       ( நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் )

கோட்டைப்புரத்து வீடு - இந்திரா சௌந்தரராஜன்

________________________________ கோட்டைப்புரத்து வீடு (இந்திரா சௌர்தரராஜன்) _________________________________        ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்தது.        மதுரைப்பக்கம் ஜமீன் கோட்டைபுரம். அந்த ஜமீன் வாரிசுகள் 30 வயது நிறைவில் மர்மமாக இறக்கிறார்கள்.      அதன் கடைசி வாரிசு விசு ..அவன் காதலி அர்ச்சனா..இருவரும் இந்த மர்மத்தைத் தோண்டுகிறார்கள்.      ஜமீனின் வாரிசுகளைக் கொன்று குவிக்கும் ஒருவனின் வன்மத்திற்குக் காரணம்? ..ஜமீன் அடிமைப் பெண்களை இழிவு படுத்துவதும், ஆங்கிலேய துரைகளுடன் சேர்ந்து கொட்டமடிப்பதும் தான்.       கதை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.அந்தக் கால அடிமை முறை, சவ அடக்கம், ஜமீன்களின் நடைமுறை இவற்றை அறியலாம். அர்ச்சனா கதையின் ஹீரோ..        பெரியராணி பாண்டியம்மாள், சின்ன ராணி தில்லை நாயகம், ரத்னாவழி, விருச்சிகமணி கதாப்பாத்திரங்களே நம்மை கதைக்குள் மூழ்கடிக்கும்..       ஆசிரியர் அவர் பாணியில் கதையை முடிக்கிறார்.அப்போது நமக்குள் எழும் அதிர்ச்சிகளே.. இப்புதினத...

பதின் - எஸ்.ராமகிருஷ்ணன்

_______________________________ பதின் (எஸ்.ராமகிருஷ்ணன்) ________________________________         பால்யத்தின் குழப்பங்களை.. மகிழ்ச்சியை..துயரத்தை ..பயத்தை ..அவமானத்தை..ஏமாற்றத்தை.. திருட்டுத்தனத்தை..கனவுகளை.. கற்பனையை ..தோழமையை.. கனவாகப் பதிவு செய்யவே இந்நூல் முயற்சி செய்கிறது.        மற்ற புதினங்களைப் போல் கதாப்பாத்திரங்களைப் பயன்படுத்தி சம்பவங்களைப் பின்னும் கதைமுறையில் இந்நூல் எழுதப்படவில்லை.       ஒரே ஆகாயத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் தனித்தனியே ஒளிர்ந்து கொண்டிருப்பதைப் போல சின்னஞ்சிறு நிகழ்வுகள் இதில் மின்னுகின்றன.                   (விலை : (275)                   (உயிர்மை பதிப்பகம்)

மோகமுள் - தி.ஜானகிராமன்

_____________________________ மோகமுள்  (தி.ஜானகிராமன்) ______________________________        தி.ஜா புதினங்களில் பரவலான...பலரது கவனம் பெற்ற நூல்.பாபு ..யமுனா மீது மரபு மீறியதாகச் சொல்லப்படும் காதல் பற்றிய புதினம்.        கும்பகோணச் சூழலில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட நடைமுறைகளையும், சமுதாயச் சட்டங்களையும், நம்பிக்கைகளையும் கடந்து புனையப்பட்ட நூல்.        நூலின் நுட்பமான கதை சொல்லும் முறையும், மொழி நடையும் பலரையும் நூலின் வசம் கொண்டு சேர்க்கும்.        மனிதனின் பலத்தையும், பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டது.                 (விலை : ரூ 650)                 (காலச்சுவடு பதிப்பகம்) 

நெய் பாயாசம் - வைக்கம் முகமது பஷீர்எஸ்.கே.பொற்றெக்காட்மாதவிக்குட்டிதமிழில்...சுரா

____________________________ நெய் பாயாசம் ____________________________ வைக்கம் முகமது பஷீர் எஸ்.கே.பொற்றெக்காட் மாதவிக்குட்டி தமிழில்...சுரா _____________________________          மேற்கண்ட மூன்று ஆசிரியர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 சிறுகதைகளின் தொகுப்பு.சுரா அவர்கள் 2014 மொழி பெயர்த்துள்ளார்.      பஷீரின் "நூறு ரூபாய் நோட்டு " "நெய் திருட்டு " "யானைத்திருடன் " உள்பட 13 கதைகள். பஷீர் அவர்களின் இளைமைப்பருவ வாழ்வியலுடன் தொடர்புடையவையாகவே அமைந்துள்ளது.கேலி கிண்டலுடன் எதார்த்தமானக் கதைகள்.        பொற்றெக்காட் அவர்களின் "ப்ரதின் ஆவி ""யமுனைக் கரையில் " "என் பம்பாய் நண்பர்கள்" என 3 கதைகள்.இவர் காட்சிப்படுத்தும் நபர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை மிக்கவர்களே. "பிரதீன் ஆவி " எழுப்பும் வினாக்கள் சிந்தித்து சிந்தனையை உறைய வைப்பவை.        மாதவிக்குட்டியின் "நெய்ப் பாயாசம் " "மாட்டுச்சந்தை " கதைகள் இடம்பெற்றுள்ளன. நெய்ப்பாயாசம் சிறுகதை நெஞ்சைப் பிசைந்து, கண்ணீர் உண்டாக்கி ஒருவித பிரம்மையில் மூழ்கச் செய்யும் என்ப...