Posts

Showing posts from February, 2021

பார்த்திபன் கனவு - கல்கி

_______________________________ பார்த்திபன் கனவு  (கல்கி) ________________________________        புகழ் பெற்ற வரலாற்றுப் புதினம் இது.பார்த்திபன் என்னும் சோழமன்னனின் கனவு, அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறியது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது.         பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன் பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகிறான்.        இதன் பின்னர் சோழநாடு பல்லவர்களிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கிறது.       வாசிப்பவர்கள் கல்கியின் "சிவகாசியின் சபதம்" புதினத்தை வாசித்தபின், இப்புதினத்தை வாசித்தால் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் இந்நூலிலும் தொடர்வதை ரசிக்கலாம்.                  (விலை : ரூ 250)                  (சாரதா பதிப்பகம்)

பண்ணையார் மகள் - லட்சுமி

_______________________________ பண்ணையார் மகள் (லட்சுமி) ________________________________          "ஆனந்த விகடன்" வார இதழில் தொடராக பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மக்கள் மனதைக்   கொள்ளை கொண்ட கதை.          அவலம், ஆனந்தம், அருவருப்பு எனப் பல்வேறு உணர்வுகளை கற்பனை வளத்தோடு, இலக்கியத்தின் வாயிலாக மக்களுக்கு உணர்த்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லட்சுமி அவர்கள்.         தந்தையிடம் பிரிந்து தாயால்  வளர்க்கப்படும் உமா, தாயின் மறைவுக்குப்பின் அவளின் விருப்பத்தின் பேரில் தந்தையிடம் செல்கிறாள்.தந்தை அழகர்நத்தம் பண்ணையார்.         அவள் சென்ற சில தினங்களிலேயே தந்தையும் இறந்துவிட பண்ணையின் தலைவியாகிறாள்.பண்ணை மேலாளர், அவர் மகன் மூலம் வரும் தொல்லைகளை சமாளித்து தனக்கு பல வழிகளில் உதவியாக இருந்த, தன்மீது அன்பு கொண்ட சிவக்குமாரை மணந்து மகிழ்கிறாள்.         காலத்தால் குன்றாத, இளமை மங்காத, கற்பனை நயம் மிக்க கதை.                 (விலை : ரூ...

வேங்கை வாசல் - உதயணன்

________________________________ வேங்கை வாசல் (உதயணன்) _________________________________      விட்டுப் போன சரித்திரப் பகுதியினை முன்பின் இணைவுகாட்டி ஒட்ட வைக்கும் கலையே சரித்திர நாவல்களின் பின்னணியாக இருப்பதைக் காணலாம்.          இப்புதினம் காஞ்சி கைலாசநாதர் கோயில் (சிவாலயம்) மூடப்பட்டு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது என்னும் சிறிய வரலாற்றுச் செய்தியின் முக்கியத்துவம் கருதி அதனைத் தேடி ஆராய்ந்து ..யார் காலத்தில் ஏன் மூடப்பட்டது என்பதற்கான கதைப் பின்னல்களை அமைத்து கதையினை சுவைபட எழுதி வெற்றி பெற்றுள்ளார் ஆசிரியர் உதயணன் அவர்கள்.        "வேங்கை வாசல் " ஆசிரியரின் படைப்பில் மற்றுமோர் பிரமாண்டம் .. வாசியுங்கள்! படித்து முடிக்கும் வரை சோழர்கள் காலத்திலேயே வாழ்வீர்கள்!!                 (விலை : ரூ 500)                 (சீதை பதிப்பகம்)

வாழ்வியல் சிந்தனைகள்தொகுதி - 5 - கி.வீரமணி

_________________________________ வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி - 5 (கி.வீரமணி) _________________________________        ஆசிரியர் விடுதலை நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு  4 ன் தொடர்ச்சியாக வெளிவந்த 5 ஆவது தொகுப்பு இந்நூல்.       "நோயற்ற வாழ்வுக்கு " முதல் "இதய நோய் பலவிதம் : ஒவ்வொன்றும் ஒருவிதம் "ஈறாக 75 கட்டுரைகளின் தொகுப்பு.        பட்ஜெட் போட்டு வாழ வேண்டியதன் அவசியம்..சிறு சிறு அலட்சியங்கள், பெரு நட்டமாவது...அறிவியல் மனப்பான்மை பெருக வேண்டியதன் அவசியம் ..தூக்கம் மருந்தில்லா மருந்து ..தோல்வி என்னும் பேராசான் நம் நண்பன் தான்...போன்ற எண்ணற்ற செய்திகளின் கருத்து களஞ்சியம் இந்நூல். "நூலைப்படி தொடங்குகையில் வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப் படி அடங்கா இன்பம் மறுபடி ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி நூலைப்படி "               (விலை : ரூ 75) (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு)

உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு

_______________________________ உன்னோடு ஒரு நிமிஷம் (வெ.இறையன்பு) _______________________________          வளரும் இளம் தலைமுறையினருக்காக சுட்டிவிகடனில் இறையன்பு அவர்கள் எழுதிய "உன்னோடு ஒரு நிமிஷம் " தொடர் கட்டுரையின் தொகுப்பு இந்நூல்.         மதிப்பெண்களைப் பெறுகின்ற அவசரத்தில் வாழ்க்கையை தவறவிட்டுவிடக் கூடாது .. எச்சரிக்கை வேண்டும் என்று  எழுதியிருக்கிறார்.       வளரும் இளம் பருவத்தினர் தங்கள் வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள இந்த நூல் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருக்கும். "உன்னோடு ஒரு நிமிஷம் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் மந்திரச் சொற்கள் "                  (விலை : ரூ 150)                  (விகடன் பிரசுரம்)

வேலைக்காரி - அறிஞர் அண்ணா

________________________________ வேலைக்காரி (அறிஞர் அண்ணா) _________________________________          கருத்துகளைப் பரப்பும் கலைக் கருவிகளுள் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.அவற்றுள் அண்ணாவின் வேலைக்காரி சிறப்பிடம் பெறுகிறது.         வீட்டிற்கு வேலை செய்ய வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாக பலரும் பார்ப்பதே இல்லை.      வேலைக்காரிக்கு மதிப்பைத் தேடித் தந்ததோடு அந்த இனத்திற்கே பெருமையைத் தேடித் தந்துள்ளார் அண்ணா இந்நூல் மூலம்.       வேலைக்காரிக்கு நடக்கும் சமுதாயக் கொடுமைகளை கூற வந்த அண்ணா அவற்றோடு ஏழைகளின் கண்ணீர், ஜாதி வேறுபாடு, போலி வழிபாடு, பணக்காரர்களின் ஆதிக்கம் ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.           பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்குச் சரியான அடியாக இந்த நாடகம் விளங்குகின்றது.                   (விலை : ரூ 40)                   (சீதை பதிப்பகம்)