Posts

Showing posts from September, 2020

அத்தை - லட்சுமி

_______________________________ அத்தை (லட்சுமி)  ________________________________       தான் விரும்பியவரைத் திருமணம் செய்து கொள்ள அண்ணன் (மயூரவாகன்) தடை விதித்ததால், அவர் சொல் கேளாமல் விரும்பியவரையே மணம் செய்து கொண்டு குஜராத்தில் குடியேறுகிறாள் நீலாவதி.          திருமணமான இரண்டு வருடங்களிலேயே கணவன் இறந்துவிடுகிறான். தான் கௌரமாக வாழும் பொருட்டு ஒரு ஆசிரமத் தலைவியின் உதவியுடன் குஜராத் குடும்பத்தில் பணிப்பெண்ணாகிறாள்.        சுமார் 40 வருடம் கழித்து தன் எஜமானியுடன் சென்னை வரும் அவள், தன் வீட்டு விசயங்களைத் தெரிந்து கொள்கிறாள்.தன் அண்ணன் மகளும் (கன்யா) ஒரு ஏழையை மணக்க விருப்பம் கொள்ள, அண்ணி உதவியுடன் திருமணத்தை நடத்தி வைக்கிறாள்.அண்ணன் சுயநினைவின்றி உள்ளார்.         தன் உறவினர்கள் கூறியதைக் கேட்காமல் மீண்டும் தன் எஜமானியுடன் வெளிநாடு செல்கிறாள்.கதை இத்துடன் நிறைவடையும்.        பெரியவர்களின் பேச்சைக் கேளாமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அழகாகச் சொல்லிச் சென்றுள்ளார் லட...

அலை ஓசை - கல்கி

அலை ஓசை (கல்கி) _________________________________        இந்நூல் நான்கு பாகங்களைக் (பூகம்பம், புயல், எரிமலை, பிரளயம்)  கொண்டது.இக்கதை சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்தது.       சுதந்திரத்துடன் வந்த பிரிவினையில் பொது மக்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது. நாயகன், நாயகி, வில்லன் என்ற மும்முனைப் போக்கு இப்புதினத்தில் இல்லை..இதுவே இதன் தனிச்சிறப்பு..        அவரவர் குண இயல்புக்கு ஏற்ப ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்கிறார்கள்.         லலிதாவும், சீதாவும், தாரணியும், சௌந்தரராகவனும், பட்டாபிராமனும் சேர்ந்து பேசிக்கொண்டு அவரவர்களுடைய அந்தரங்க ஆசாபாசங்களையும், உள்ளக் கிளர்ச்சிகளையும் வெளியிட்டு "அலை ஓசை "யை எழுதியிருக்கிறார்களோ என்ற ஒரு மாயையை (பிரம்மையை) வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்தும்..        மிக அற்புதமான புதினம்.. சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.. வாசியுங்கள்!! வாழ்வை வளப்படுத்துங்கள்!!                  (விலை : ரூ 550) ...

அழகு என்னும் தெய்வம் - லட்சுமி

அழகு என்னும் தெய்வம் (லட்சுமி) _________________________________           நெஞ்சைத் தொடும் புதினம்.எல்லோர் மனதையும் கவரும் அழகான கதை.          கதை நாயகி - சுகன்யா. அவள் எண்ணம் ஈடேறும் வரை காத்திருக்கிறாள்.குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை அப்படியே நம் கண்முன் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.         தன்னலம் ஒன்றே குறியாய் வாழும் அந்த வட்டத்திலிருந்து, நித்தியானந்தன் எப்படி மாறுபட்டு வாழ்கிறான் என்பதை, கதைப் போக்கில் லட்சுமி அவர்கள் அழகாகவே சித்தரித்துள்ளார்.                (விலை : ரூ 65)                (திருமகள் நிலையம்)