புதுமைப்பித்தன் சிறுகதைகள்(புதுமைப்பித்தன்)
______________________________ புதுமைப்பித்தன் சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) _______________________________ "கருத்தின் வேகத்தை பிரதானமாகக் கொண்டு, தாவிச் செல்லும் நடை " புதுமைப்பித்தனுக்கே உரியது. பல சந்தர்ப்பங்களில், பலவேறு மனப்பான்மைகளில் அவர் எழுதியுள்ள பல்வகைப்பட்ட கதைகளில் 16 கதைகளின் தொகுப்பு இந்நூல். இவரின் எழுத்து மனிதனையும், அவனுடைய வாழ்க்கையையும் பற்றிய ஆழ்ந்த, பரந்த நோக்கையும், முதிர்ந்த சிந்தனையையும் உள்ளடக்கியது. இத்தொகுப்பில், "காஞ்சனை " "சாப விமோசனம் " கடவுளும் கந்தசாமிபிள்ளையும் " "கயிற்றரவு " போன்ற அவருடைய சிறந்த கதைகள் பல உள்ளன. " இலக்கியத்தில் கலையம்சம் என்பது ஜீவத்துடிதுடிப்பில்தான் இருக்கிறது " என்ற ஆசிரியரின் கூற்றுக்கு விளக்கமாக இக்கதைகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன. (விலை : ரூ 07)(1976 ல்) (பாரி நிலையம்)