Posts

Showing posts from August, 2022

புதுமைப்பித்தன் சிறுகதைகள்(புதுமைப்பித்தன்)

______________________________ புதுமைப்பித்தன் சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) _______________________________         "கருத்தின் வேகத்தை பிரதானமாகக் கொண்டு, தாவிச் செல்லும் நடை " புதுமைப்பித்தனுக்கே உரியது.       பல சந்தர்ப்பங்களில், பலவேறு மனப்பான்மைகளில் அவர் எழுதியுள்ள பல்வகைப்பட்ட கதைகளில் 16 கதைகளின் தொகுப்பு இந்நூல்.        இவரின் எழுத்து மனிதனையும், அவனுடைய வாழ்க்கையையும் பற்றிய ஆழ்ந்த, பரந்த நோக்கையும், முதிர்ந்த சிந்தனையையும் உள்ளடக்கியது.         இத்தொகுப்பில், "காஞ்சனை " "சாப விமோசனம் " கடவுளும் கந்தசாமிபிள்ளையும் " "கயிற்றரவு " போன்ற அவருடைய சிறந்த கதைகள் பல உள்ளன.          " இலக்கியத்தில் கலையம்சம் என்பது ஜீவத்துடிதுடிப்பில்தான் இருக்கிறது " என்ற ஆசிரியரின் கூற்றுக்கு விளக்கமாக இக்கதைகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.              (விலை : ரூ 07)(1976 ல்)               (பாரி நிலையம்)

பிஞ்சுகள்(கி. ராஜ நாராயணன்)

_____________________________________ பிஞ்சுகள் (கி. ராஜ நாராயணன்) _____________________________________             இக்குறுநாவலின் கதாநாயகன்  சிறுவன் வெங்கடேசு.. பறவைகளிடம் பரிவு கொண்டவன். அதன் அழகை ரசிப்பவன்.        இயற்கையுடனான சில அனுபவங்கள் .. இயற்கையைப் பற்றிய தொல்லியல் தொன்மங்கள் என கதைப் போகிறது..         இந்நூலில் இடம் பெறும் தேன் கொத்தி, தைலான் பறவை, தாராக் கோழி, தேன்சிட்டு இது போன்ற பல பறவைகளின் பெயர்கள் பலர் அறியாதவை..         இயற்கையை கவனித்து அதை உள்வாங்கி எழுதியுள்ளதால் சுற்றுச்சூழலாளர்கள் கி.ரா விடம் பல விசயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.. நாமும்தான்..         பறவைகளின் பெயர்கள் நம் நினைவில் பறந்து கொண்டிருந்தால் , பறவைகள் வானில் சுதந்திரமாகப் பறக்கும். இதைத்தான் கி.ரா வின் "பிஞ்சுகள் "  நினைவுபடுத்துகிறது.. இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல் இது... வாசியுங்கள்! இயற்கை இலக்கியச் சோலையில் சற்றே இளைப்பாற வாருங்கள்!!          ...

சேவைக்கு ஒரு சகோதரி(மோனிகாஃபெல்டன்)தமிழில்... அநுத்தமா

_________________________________ சேவைக்கு ஒரு சகோதரி (மோனிகாஃபெல்டன்) தமிழில்... அநுத்தமா __________________________________         எல்லோருடைய அன்புக்கும், பெரு மதிப்புக்கும் உரிய சகோதரி சுப்புலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். மோனிகாஃபெல்டன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை சுவைகுன்றாமல் தமிழாக்கித் தந்துள்ளார் அநுத்தமா அவர்கள்.              "கல்கி" பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த போது வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது..          வாழ்க்கையில் துயரமும், துன்பமும் அடைந்து தவிக்க நேரிட்ட மக்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், தெய்வ பக்தியும் வெற்றியைத் தேடித்தரும் என்பதை சொல்லும் புத்தகம் இது..         விதவைகள் வாழ்வு இழந்துவிட தேவையில்லை.அவர்கள் தாமும் முழுமையாக வாழ்ந்து.. மற்றவர்களையும் கைத்தூக்கி விடலாம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெண் சுப்புலட்சுமி அவர்கள்.       இந்நூலைப் படிப்பவர்களுக்குத் தொண்டின் அருமையும், வலிமையும் புரியும்.      ...

கண்ணீரால் காப்போம்(பிரபஞ்சன்)

_________________________ கண்ணீரால் காப்போம் (பிரபஞ்சன்) _________________________      புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து மீட்க பிரெஞ்சு _ இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கியது!      பிரெஞ்சுக்காரர்களை விரட்ட விடுதலை இயக்கம் வீறுகொண்டு எழுந்தது! தன்னலமற்ற தியாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்! தம் இன்னுயிரை நீத்தனர்! சிலர் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர்!      விடுதலைக்குப் பாடுபட்ட வ.சுப்பையா உள்பட பல தியாகசீலர்களின் அறவாழ்வை இந்நூலில் எழுதி இப்படிப்பட்ட மாமனிதர்களை நமக்கு நினைவூட்டுகிறார் பிரபஞ்சன்!     புதுச்சேரி மண் சுதந்திரக் காற்றை சுவாசிக்க,  தியாகங்களைச் செய்த பல தியாகச் செம்மல்களை இந்நூல் மூலம் அறியலாம்!  வாருங்கள்! வாசிக்கத் தொடங்குவோம்! 📚                 (விலை : ரூ 215)                 (விகடன் பிரசுரம்)

காந்தள் நாட்கள் (இன்குலாப்)

 காந்தள் நாட்கள் (இன்குலாப்) __________        உணர்ச்சி மிகுந்த கவிதைகளை, எழுச்சிமிகு வரிகளால் வடித்திருக்கிறார்.சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதியிருக்கும் விதம் அருமை.       சமூகம் மற்றும் தனி மனித உறவுகள் சார்ந்த பல்வேறு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. "சாண் ஏறினால் முழம் சறுக்கும் ஏறிக்கொண்டே இரு :முழம் ஏறி உச்சிக்கு நீ போவாய் - சத்தியம் "      என்று முயற்சியை உயர்த்திப் பிடித்தல், முற்போக்குச் சிந்தனை, சமூக அவலங்களைச் சாடுதல், பெண்ணியச் சிந்தனைகள், நகைச்சுவையின் பரிமாணங்கள் முதலியவை இந்நூலில் மிளிர்கின்றது.            2017 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.               (விலை : ரூ130)               (அன்னம் அகரம் பதிப்பகம்)

பெண்ணே நீ வாழ்க (பிரேமா சுப்ரமணியன்)

 பெண்ணே நீ வாழ்க (பிரேமா சுப்ரமணியன்) ____________           இந்தியப் பண்பாடு பாராட்டுதற்குரியது. ஆனால் தற்போது மனித வாழ்வில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.         கணவனை இழந்த  பெண்களுக்கு மறுமணம் செய்துவித்தல், சொத்துரிமை போன்றவை. இவை வரவேற்கத்தக்கவை.         சில நேரங்களில் அழகும், இளமையும் அவளுக்கு பகையாகிறது. இத்தகைய சமூகசீர்கேடுகளை தடுக்கவேண்டும்.            பெண்ணின் திருமண வாழ்வில் தோல்வி ஏற்படும் போது உடன்பிறந்தவர்கள் ஆறுதல் சொல்லவோ, ஆதரவளிக்கவோ முடியாத சூழ்நிலையில் இந்தக் கதையில் வரும் மீனாட்சியின் முடிவுதான் மற்ற பெண்களும் நினைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.                  (விலை : ரூ 230)                  (ஸ்ரீ வாரி வெளியீடு)

சந்திரவதனா (எஸ்.பாலசுப்ரமணியன்)

 சந்திரவதனா (எஸ்.பாலசுப்ரமணியன்) ___________        1998 ல் வெளிவந்த புதினம்.கி.பி 17ஆம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து இக்கதை எழுதப்பட்டது.       தஞ்சையை ஆண்ட விஜயராக நாயக்கர் என்னும் மன்னனின் மகள் " சந்திரவதனா " கதை நாயகி. மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கன் கதையின் நாயகன்.       அக்காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை கதையில் நேரடியாகக் காட்டியதோடு அவற்றிற்கான புத்தகச் சான்றுகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.        இடையிடையே வரும் வேதங்கள் தொடர்பான தருக்கங்கள், சாத்திரங்கள் பற்றிய முழுமையான எளிமையான விளக்கம் சிறப்பு.       கதைப்படித்து முடித்தவுடன் குறைந்தது ஒரு வாரத்திற்கு கனத்த மனதுடன் இருப்பது.. வாசிக்கும் போது அந்த காலத்திற்கே சென்றுவிடுவது போன்ற உணர்வு..வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை இவையெல்லாம் இக்கதையின் சிறப்பு..               (நான்கு தொகுதிகள்)                 (கலைஞன் பதிப்பகம்)

பேச்சரவம் கேட்டிலையோ... (தமிழச்சி தங்கபாண்டியன்)

 பேச்சரவம் கேட்டிலையோ... (தமிழச்சி தங்கபாண்டியன்) _________       ஆசிரியரின் பல்வேறு நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்!       கலை, இலக்கியம், நாடகம், அரசியல், சமூகம் என ஒரு தீவிர செயல்பாட்டாளராக பணியாற்றிவரும் அவர் தனது நம்பிக்கைகளை மிகத் தெளிவாக இந்த நேர்காணல்களில் முன் வைக்கிறார்!       விவாதங்களைத்  திறந்த மனதுடன் எதிர் கொள்ளும் நேர்த்தியும், தனது நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காத உறுதியும் இவரது உரையாடல்களுக்கு உயிரூட்டுகின்றன!      மனத்தெளிவும், நேர்மையும் கொண்ட இந்தப் பேச்சுக்களின் வழியே தமிழச்சி அவர்கள் ஒரு தனித்துவமான ஆளுமையாக வெளிப்படுகிறார்! வாசிப்பவரை வசப்படுத்தும் நூல் இது! 📚