பட்டாம்பூச்சி(ரா.கி.ரங்கராஜன்)
_________________________ பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) _________________________ ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறை கைதியால் பாப்பிலான் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்த சுயசரிதை புத்தகம்! ரா.கி.ரங்கராஜன் தமிழாக்கம் செய்துள்ளார்! சுதந்திர வேட்கையும், வீரமும் நிறைந்த மனிதனது வரலாறு! சுதந்திர வேட்கையும், நண்பர்களிடையே அவனுக்குள்ள மிகுந்த செல்வாக்கும், துன்பங்களை அவன் எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் மனத்துணிவும், யாருக்கும் பணியாத, அதே சமயம் யாரையும் பகைத்துக் கொள்ளாத அவன் சாமர்த்தியமும் படிப்பவரை வியக்க வைக்கும்! காதல், வீரம், சுதந்திரம், தத்துவம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய மிகச்சிறந்த காவியம்! எத்தனை முறை படித்தாலும் சலிக்காது! 📚 (நர்மதா பதிப்பகம்)