இலக்கியச் சோலை (அறிஞர் அண்ணா)

_________________________
இலக்கியச் சோலை
 (அறிஞர் அண்ணா)
_________________________
      பழந்தமிழகம் செய்தியால் விரிந்ததாகவும், சிறப்பால் ஆழ்ந்ததாகவும், வரலாற்றுச் சான்றுகள் எட்ட முடியாத அளவு உயர்ந்ததாகவும் விளங்குகின்றது!
       பழந்தமிழர் மக்களைக் காண அறிஞர் அண்ணா அவர்கள் புறநானூறு, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம், திருக்குறள், முல்லைப்பாட்டு ஆகிய சங்க கால நூல்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள் இந்நூலின் மூலமாக! 
    இலக்கியச்சோலையில் புகும் நாம், அவர் காட்டும் வழியினை _ நெறியினை போற்றிப் புகழ்வதோடு, நடைமுறையில் கொண்டு, நம் வாழ்வினை விழுப்பம் உடையதாக ஆக்கிக் கொள்வோம்!
      இந்நூலில் பன்னிரெண்டு கட்டுரைகள் உள்ளன! அத்தனையும் முத்துகள்!
      அனைவரும் அண்ணாவின் இலக்கியச்சோலையில் புகுந்து, இலக்கியச் சுவையை பருகவேண்டும்! 📚
  (பூம்புகார் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்