Posts

Showing posts from April, 2022

தூர்வை(சோ.தர்மன்)

___________________________ தூர்வை (சோ.தர்மன்) ____________________________        இப்புதினத்தை வாசிக்கும் போது அந்தக் கதைக் களத்தில் கரிசல் காட்டின் வெம்மையும், நீர்மையும் நம் மேல் அப்பிக்கொள்ளும்.கதையில் நாம் மயங்கிக் கிடப்போம்.        கரிசல் பூமி, கந்தகபூமியான கதை .விவசாயத்தை விட்டு சம்சாரி, தீப்பெட்டித் தொழிற்சாலையின் காவலாளியாய் போனதை இயல்பாய், அழகாய், காட்டோடை போல சிலுசிலுத்து நம்மை ஈர்க்கும் கதை.        கதையைப் படித்து நெடுநாள் ஆனாலும், மினுத்தான் - மாடத்தி தம்பதிகள் நம் மனதைவிட்டு அகலுவதில்லை.        விவசாயக் குடும்பங்கள் மாடத்தில் அமர்ந்து கதையளப்பது, சிலம்பம் பழகுவது, ஒயில் கும்மியாடுவது, அதையும் தாண்டி நேர்த்திக்கடன் தீர்க்க, வண்டிகட்டி குடும்பம் குடும்பமாக போவது இதையெல்லாம் படிக்கும் போது காலம் மாறிப் போனதை எண்ணி மனம் ஏங்கும்.        வாசிக்க வாசிக்க கரும்புச்சாறு போல் ஈர்க்கும் சொல்நடை நம் மனதை மயக்கும்.மாற்றங்கள் எல்லாம் ஏற்றங்களை நோக்கி மட்டும் அல்ல என்று எண்ணினாலும், வாழ்க்...

இந்த நாள் இனிய நாள்..(சுகி.சிவம்)

_______________________________ இந்த நாள் இனிய நாள்.. (சுகி.சிவம்) ________________________________       24 கட்டுரைகள் அடங்கிய ஓர் அறிவுப் பெட்டகம். புத்தக ஆர்வலருக்கு இந்நூல் ஓர் அருமையான உந்துசக்தி. ஆற்றலுடன் செயல்பட நினைப்பவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி.        சன் தொலைக்காட்சியில் விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இனிய நிகழ்வாக சுகி.சிவம் அவர்களின் சொல்லமுதைக் கேட்டு, பார்த்து ரசித்த ஆயிரக்கணக்கான அன்பு வாசகர்களின் "வாசிப்பு " ஆர்வத்திற்கு ஏதுவாக இந்நூல் வெளிவந்துள்ளது.      பெட்டகத்தைத் திறந்திடுங்கள்.இவ்வழிகாட்டியின் துணை கொண்டு ஆற்றலுடன் செயல்படுங்கள்.                  (விலை : ரூ90)                  (கவிதா பப்பிளிகேஷன்)

பொம்மராயன்(ஜார்ஜ் அந்தோணி சாமி)

______________________________________ பொம்மராயன் (ஜார்ஜ் அந்தோணி சாமி) _______________________________________          ஜார்ஜ் அவர்களின் பயணங்கள் காட்டை நோக்கியும், உயிர்களை நோக்கியுமே இருக்கிறது. இப்பயணத்தில் நம்மை நாம் பயணியாக்கிக் கொள்ளலாம்.          விதவிதமான யானைகளும், அவற்றின் வாழ்க்கையும், வலிகளும், ஆச்சரியங்களாய் விரியும் இச்சிறு புத்தகம்.. பேரனுபவத்தைத் தருகிறது.          யானைகளுக்கும், மனிதனுக்குமான உறவை, உண்மையைப் பேசுகிறது.. "பொம்மராயன் " என்பது பழங்குடிகளின் குலசாமிகளில் ஒன்று. யானையை அவர்கள் அந்தப் பெயரிட்டு அழைக்கின்றனர். எல்லோருக்கும் யானை குலசாமி தான்..         அற்புதமான கதைச்சொல்லி போல் ஆசிரியர் சொல்லிச் செல்வது வாசிப்பவரை இயற்கையை அறியச் செய்யும் .. இயற்கையை அறிவது நம்மை நாமே அறிதல் ஆகுமல்லவா..                     (விலை : ரூ 150)                     (வம்சி புக்ஸ்)  நட்பு...

புத்தகம் என்பது ...(ஈரோடு தமிழன்பன்)

_______________________________ புத்தகம் என்பது ... (ஈரோடு தமிழன்பன்) ________________________________         புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களைக் கூட தன் பக்கம் சுண்டி இழுக்கும் ஆற்றல் பெற்ற 122 குட்டிக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.        கவிதைப் புத்தகங்கள் நிறைய உண்டு. இந்நூல் புத்தகம் பற்றிய கவிதைகளைக் கொண்டது. கவிதைகளால் நெய்யப்பட்ட நூல்.       கவிதையின் வெற்றி என்பது படிக்கும் வாசகனையும் பங்காளி ஆக்க வேண்டும்.அந்த வகையில் பல கவிதைகள் இந்நூலுக்கு வெற்றி வாகை சூடியுள்ளன. முதல் கவிதை.. "பத்து பறவைகளோடு பழகி நீங்கள் பறவையாக முடியாது.. பத்து நதிகாளோடு பழகி நீங்கள் ஒரு நதியாக முடியாது.. பத்துப் புத்தகங்களுடன் பழகிப் பாருங்கள் பதினோறாவது புத்தகமாகி படிக்கப்படுவீர்கள்.." எளிய மொழிநடை கவிதைக்கு அழகு தரும். "புத்தகம் படிப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல.. ஆனால் அறிவாளிகள் எல்லாம் புத்தகம் படித்தவர்களே..."                    (விலை : ரூ 60)             ...

மழைக்கண்(செந்தில் ஜெகநாதன்)

____________________________________ மழைக்கண் (செந்தில் ஜெகநாதன்) ____________________________________          வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை சொல்லவல்லது சிறுகதைகள்..        வேளாண் குடும்பம்..திரை உலகம்..என்ற இரு பின்னணிகளில் பயணப்படுகின்றன இச்சிறுகதைகள்..       "அன்பின் நிழல் " முதல் " நேசன் " முடிய 9 சிறுகதைகள் உள்ளடங்கிய தொகுப்பு இந்நூல்..          அன்றாட தருணங்களைச் சொல்ல அழகிய நடையைக் கையாண்டு வாசிப்பவரை வசப்படுத்துகிறார் ஆசிரியர்.        "நித்தியமானவன் "  "மழைக்கண்"  "காகளம்" கதைகள் கருத்தைவிட்டு அகலாது.. "நெருநல் உள்ளொருத்தி " வாசிப்பவரை ஒரு நாளேனும் தூங்கவிடாது.. செந்தில் ஜெகநாதனின் படைப்புகளுக்கு ஒரு மைல்கல்  "மழைக்கண் "                      (விலை : ரூ 150)                      ( வம்சி புக்ஸ்)

நயம்பட வாழுங்கள்(சிவசூரியன் அவர்கள்)

_________________________ நயம்பட வாழுங்கள் (சிவசூரியன் அவர்கள்) _________________________     வாழ்க்கை அன்பு நயங்களில் அடங்கி இருக்கிறது!      தனிமனித வாழ்க்கையும், சமுதாய வாழ்க்கையும் பொலிவு பெறுவதற்கு அன்பு என்னும் விதைகளை விதைத்துக் கொண்டே இருக்கவேண்டும்!       மனிதன் நயம்பட வாழ்வதற்கு இன்முகம், உதவிகள் செய்யும் உளபாங்கு, ஒருமுகச்சிந்தனை உண்மை, பணிவு, மேம்பட்ட குணம், நலிந்தவர்களுக்கு வழிகாட்டுதல், சந்திப்பில் சந்தோசத்தை ஏற்படுத்துதல், மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவை மிகவும் தேவை!      நயம்பட வாழ்வதற்கு பத்து நல்வழிகளை இந்நூல் கூறுகிறது! அவற்றை பத்துக் கட்டளைகளாக ஏற்று கடைபிடித்தால் நயமான புகழுடைய வாழ்க்கை வாழலாம்! 📚        (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

இதுவும் கடந்து போகும்(பால் சுயம்பு)

_____________________________ இதுவும் கடந்து போகும் (பால் சுயம்பு) ______________________________       ஆரோக்கியத்துடனுடம், மகிழ்ச்சியுடனும் வாழ படைக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியின்றி, மனநிறைவின்றி வாழக் காரணம் என்னவாக இருக்கும். அனைத்திற்கும் விடை இந்நூலில் உள்ளது.        தொடர் தோல்வி, அவமானம், நோய், முதுமை, பயம் இப்படி பலவகையான உணர்வுகளால் துன்புற்று வாழும் மனித சமுதாயம், பயமும், கவலையும், கண்ணீரும் இன்றி நிம்மதியாக வாழ வகை சொல்கிறது இந்நூல்.        இப்புத்தகத்தை வாசிப்பவர், பதற்றம், பயம், கவலைகள் நீங்கி தெளிவும், மன தைரியமும் பெறுவர் என்பது திண்ணம்.        இந்தப் புத்தகத்தில் வரும் சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நிச்சயம் ஏதாவது ஒருவகையில் ஒத்துப்போகும்.பிரச்சனைகளுக்குப் புதிய தீர்வு கிடைக்கும். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல் இது.                  (விலை : ரூ 150)                  (தினத்தந்தி பதிப்பகம்)

ருத்ர நேத்ரா(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில்...கௌரி கிருபாகரன்

_____________________________ ருத்ர நேத்ரா (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்...கௌரி கிருபாகரன்  ______________________________        "ருத்ர நேத்ரா " என்ற தெலுங்கு புதினத்தை அதே பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார் கௌரி கிருபாகரன் அவர்கள்.         இந்நூலை படிக்கும் போது சில பக்கங்கள் மர்ம நாவலைப் படிப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.          கதாநாயகனை விரும்பும் மூன்று பெண்களையும் விரசம் இல்லாமல், வேறுபடுத்தியுள்ள பாங்கு அருமை.குழந்தைத்தனம் மிகுந்த வெகுளியாக ஒரு பெண்ணையும், ஏக்கமும், தனிமையும் நிறைந்த ஒரு பெண்ணையும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் உள்ள ஒரு பெண்ணையும் சித்தரித்தது நயம் மிக்கது.         பார்வையற்ற வளர்ப்புத் தங்கை, தன் அண்ணணின் நாட்டுப்பற்றுக்குத் தான் சிறிதும் குறைந்தவள் அல்ல என்பதை தன் செயலால் மெய் சிலிர்க்க வைக்கிறாள்.         பெண்மையை வேறுபடுத்தி எழுதிய விதம், நாட்டுப்பற்று, அஞ்சா நெஞ்சம்,தியாகம், இரக்கம் போன்ற நல்ல பண்புகளையும், சுயநலம், ஆணவம், அகம்பாவம் போன்ற தீயப...

தண்ணீர் தேசம்(கவிப்பேரரசு வைரமுத்து)

____________________________ தண்ணீர் தேசம் (கவிப்பேரரசு வைரமுத்து) ____________________________       இது உவமைகளின் தேசம்.  கற்பனை நதிகள் பல கலந்த தேசம். வாழ்க்கையின் நியாய அநியாயங்களை வேரறுத்த தேசம். ஆக்ஸிஜனுடன் நம்பிக்கையையும் சுவாசித்தால் மரணத்தையும் வென்று விடலாம் என்றும்,  அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை என்றும் பாடம் நடத்திய தேசம்.       நட்புக்கு 100 சதவிகித அர்த்தம் சொல்லும் நேசங்கள் வாழ்ந்த தேசம். பல அறியாத அறிவியல் புதிர்களை அழகிய தமிழில் மொழி பெயர்த்த தேசம்.        கடலை பலவாறு விவரித்து வியந்த தேசம். "கடல் அது ஒரு தனி உலகம். பள்ளி கொண்ட விஸ்வரூபம்.. கவிஞர்களின் கனா.. முத்துகளின் கர்ப்பப்பை.. பவளங்களின் தொட்டில்.. கலங்கள் நகரும் திரவத்திடல்.. விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடம்.. ஞானிகளின் தத்துவம்.. அடுத்த நூற்றாண்டு உணவுத்தேவையின் அமுதசுரபி .. இது வியப்பின் விலாசம்.. பூமாதேவியின் திரவச்சேலை.."       மொத்தத்தில் தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம்..         வாசிப்பை நேசிக்கச் செய்ய வைக்கும் மந்...

பருக்கை(வீரபாண்டியன்)

_________________________________ பருக்கை (வீரபாண்டியன்) _________________________________       கிராமத்திலிருந்து கல்விக் கனவுகளுடன் நகரத்தை நோக்கி வரும் இளைஞர்கள் படும்பாட்டை இப்புதினம் சித்தரிக்கிறது.        தற்காலத்தில் கல்லூரி மாணவர்களின் வாழ்வியலை .. கல்லூரியில் இடம் கிடைத்தும் தங்கிப் படிப்பதற்கு, விடுதி வசதி இல்லாததை.. விடுதி இருந்தும் சரியான உணவு கிடைக்காமை போன்ற சிக்கலில் சிக்கி.. உணவுக்காகவும், தங்களுடைய பணத் தேவைக்காகவும் பகுதி நேரம் பணி புரிந்துகொண்டு படிக்கும்  மாணவர்களின் நிலைமையை பொட்டில் அடித்தாற் போல் சொல்கிறது இப்புதினம்.        சாகித்திய அகாடமி  "யுவ புரஸ்கர் " விருது பெற்ற நூல் இது.              (விலை : ரூ 220)              (பரிசில் புத்தக நிலையம்)

என் பழைய பனை ஓலைகள்(வைரமுத்து)

_________________________ என் பழைய பனை ஓலைகள் (வைரமுத்து) _________________________      கவிஞர் அவர்கள் கல்லூரி நாட்களில் எழுதிய சிறந்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல்!      கவிஞரின் இன்றைய வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய அஸ்திவாரம் இருந்திருக்கிறது என்பது இந்நூலைப் படிக்கும்போது தெரியும்!     இக்கவிச்சோலையில் உள்ள பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்! மனதை மயக்கும்! _______________     அமைதி _______________ "கண்ணிலே காட்சி தேக்கம்!     கரும்பிலே சாற்றின் தேக்கம்!  விண்ணிலே முகிலின் தேக்கம்!      வேதனை நெஞ்சில் தேக்கம்! மண்ணிலே கடலின் தேக்கம்!     மனிதரில் வஞ்சம் தேக்கம்! என்னுள்ளே துன்பம் தேக்கம்!    எங்குதான் அமைதி தேக்கம்!  __________________     "ஆசிரியர் " __________________ அடுத்ததொரு புவிபடைத்தால் ஆண்டவனே! ஆளுகின்றோர் ஆசிரியராய் இருக்க வேண்டும்! கொடுத்தவரை மதிக்காத கோணல்மதிச் சமுதாயக் கொள்கைக்கே உயிர் வருமோ மீண்டும்! "📚        (பாரதி பதிப்பகம்)

மரபும் புதுமையும்(தொ.பரமசிவம்)

_____________________________ மரபும் புதுமையும் (தொ.பரமசிவம்) _____________________________          நிறுவனமனமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கி, கெட்டியாகிக் போன மரபுகளுக்கு மாறாக நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பை அகழ்ந்து உரைப்பவை தொ.ப வின் ஆய்வுகள்.          ஆதிக்க அரசியல் உள்நோக்கத்தை இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் காட்டுகின்றன.         பண்பாட்டு மரபைப் பேணும் அதே வேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு, இசைவான தகவமைப்பையும் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.               (விலை : ரூ 100)               (காலச்சுவடு பதிப்பகம்)

சாய்வு நாற்காலி(தோப்பில் முகமது மீரான்)

_________________________ சாய்வு நாற்காலி (தோப்பில் முகமது மீரான்) _________________________      மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்ட வர்மா மகாராசா மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்,           நிலாவுடைமைக்காரர்களாக மாறும் அரசின் அடியாட்கள், சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே (பெண்கள் உட்பட) தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சா வழியினர்       பெண்களை அடித்து மிரட்டும் அதபு பிரம்பு என குடும்ப, சமூக, வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கும் புதினம் இது!       தமிழ் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த புதினம்!      கதாசிரியர் காட்டிச் சென்ற உலகில் வாசிப்பவர்களை வாழ்ந்திடச் செய்தல் இந்நூலின் சிறப்பு!      சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல்! 📚       (காலச்சுவடு பதிப்பகம்)

மாங்கனி(கவிஞர் கண்ணதாசன்)

________________________________ மாங்கனி (கவிஞர் கண்ணதாசன்) ________________________________        1954 இல் கவிஞர் எழுதிய குறுங்காவியம்.காவியத்தின் கதை கரு வரலாற்றுச் சான்றினை ஆதாரமாகக் கொண்டது.40 தலைப்புகளில் இக்கவிதைக் காப்பியத்தை இயற்றியுள்ளார். மாங்கனி நாயகி, அடலேறு நாயகன்.        பல தலைமுறைகளுக்கு முன்னால் இருந்த மக்களின் உள்ளங்களில் பதிந்த, வரலாற்று நிகழ்வுகளை தம்முடைய படைப்புக்கு ஆதாரமாக்கியுள்ளார் கவிஞர்.அந்த நிகழ்ச்சி காதலின் மாண்பினை விளக்கும் கதையானதால் சிறப்பு பெறுகிறது.       கவிதைகள் வெறும் பொழுதுபோக்கிற்காக அல்லாமல் வாழ்வை செம்மை படுத்தவே என்று "மாங்கனி " உணர்த்துகிறது.சிறப்புமிக்க உவமைகள் காணக் கிடக்கின்றன.சுமார் 108 உவமைகளை இந்நூலில் காணலாம்.        தமிழ்மொழியின் மேன்மையைச் சொல்லுதல், அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்துதல், காதல், கற்பு இவற்றின் உயர்வு, நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கு என "மாங்கனி "பல பரிமாணங்களைக் கொண்டு புனையப்பட்டுள்ளது.                 ...