Posts

Showing posts from July, 2022

ஆலமர விழுதுகள் (பி.வி.ஆர்)

 ஆலமர விழுதுகள் (பி.வி.ஆர்) ___________         அனந்தராமன் - கோமதி தம்பதியரைத் தலைமையாகக் கொண்ட குடும்பம்.. பெரிய மகன்  ரங்கநாதன்,மனைவி சொர்ணத்தின் தன்னலத்தால் தாய் தந்தையரைப் பிரிந்து தனியாகச் செல்கிறான்.         இரண்டாவது மகன் ராமுவும் மனைவியும் அதே போல் தனியாகச் செல்கின்றனர். மூன்றாவது மகன் மூர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவன் மனம் கவர்ந்தவள் ஜானா (ஜட்ஜ் சதாசிவத்தின் மகள்)           கணவன் எஸ்.எஸ்.நாத் மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்வதுடன், அவனுக்கு வர வேண்டிய பணத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு.. மகள் சாருவையும், மகன் மனோஜையும் தாய்வீட்டிற்கு அழைக்கும் மூத்த மகள் "சீதா "..         இளைய மகள் மாலதி புற்று நோயால் மறைந்த நிகழ்வு தாயை மிகவும் பாதிக்கிறது.        கூட்டுக் குடும்பத்தின் அருமை புரியாமல் பிரிந்து சென்ற குழந்தைகள், பல இழப்புகளுக்குப் பின் கூட்டுக்குடும்பத்தில் கிடைக்கும் அன்பு, கருணை, விட்டுக் கொடுத்தல், பகிர்தல் என எல்லா சிறப்புகளையும் உணர்ந்து ஒன்...

1945 இல் இப்படி எல்லாம் இருந்தது (அசோகமித்திரன்)

_________________________ 1945 இல் இப்படி எல்லாம் இருந்தது  (அசோகமித்திரன்) _________________________       அசோகமித்திரன் அவர்கள் எழுதிய 22கதைகளின் தொகுப்பு இந்நூல்!        வாழ்க்கையின் ஆச்சரியத்தையும், துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும், எள்ளல் மிளிரும் நடையுடனும், கருணையுடனும் வெளிப்படுத்துகின்றன இக்கதைகள்!        உண்மைக்கும், புரிதலுக்கும் உள்ள இடைவெளிதான் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் எல்லா கதைகளுக்குமான மையப்பொருள்!📚       (காலச்சுவடு பதிப்பகம்)

புதைமணல்(லட்சுமி)

_______________________________ புதைமணல் (லட்சுமி) _______________________________         சம்சார சாகரத்தின் சங்கடங்களை விட்டு சந்நியாசம் வாங்கி, அது ஒத்து வராமல் வீட்டிற்கு வந்து சோம்பேறியாக வாழும் ஊதாரித் தந்தை ..தன் இருமகள்களின் வாழ்விற்காக, தன் மகன்களிடம் பணத்தைக் உறிஞ்சும் தாய்...       கணவன் வீட்டிற்கு காசு சேர்ப்பதில் குறியாக இருக்கும் தங்கை இருவர்...இந்த அனைவரும் சேர்ந்து அழுத்த, அப்புதைமணலில் இருந்து புத்திசாலித்தனத்தால் தனியே சென்றுவிடும் அண்ணன் மித்திரன்...          தம்பி சந்திரனோ அப்புதைமணலில் இருந்து மீள முடியாமல், பெற்றோர்களின் பண ஆசையால் தாம் விரும்பிய ரஞ்சிதாவைக் கைவிட்டதோடு நோயாளி மனைவியையும் (சுபாஷினி) பறிகொடுத்து விடுகிறான் .           மனைவியின் நினைவுகளுடன் தன் பெண்ணை வளர்த்து ஆளாக்க நினைக்கிறான் சந்திரன்.அத்துடன் கதை நிறைவடையும்.         பண ஆசையால் ஒரு குடும்பம் எப்படி துன்பப்படுகிறது என்பதை இந்நூல் உணர்த்தும்.. வாசியுங்கள்..ஏதாவது ஒரு கதாப்பாத்திரம் நம்முட...

நெப்போலியன்(என்.சொக்கன்)

_______________________________ நெப்போலியன் (என்.சொக்கன்) _______________________________         நெப்போலியன் 15 வயதிலேயே சக மாணவர்களைக் காட்டிலும் ராணுவம், போர்முறைகளைப்பற்றி நிறைய படித்து தெரிந்து கொண்டான்.          ராணுவத்தில் உயர்ந்த பதவிக்குச் செல்ல வேண்டும்...மிகச் சிறந்த படைத் தளபதியாக வேண்டும்...பல நாடுகளை வெல்ல வேண்டும் என்ற ஆசைகளை வளர்த்துக் கொண்டான்.        1793 ல் தன் 24 ஆம் வயதில் பிரெஞ்ச் ராணுவத்ன் "பிரிகேடியர் ஜெனரல் " பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்..ஜோசஃபினை மணத்தல்..ஆஸ்திரியாவுடன் போர் செய்தல்...வெற்றி பெறுதல்..1804 பிரெஞ்சு பேரரசராக முடிசூடுதல்..ஆஸ்திரிய இளவரசி மேரி லூயிசை இரண்டாம் திருமணம் செய்தல்..           1814 ல் பாரிஸ் நகரம் எதிரிகளால் கைப்பற்றப்படுதல்..எல்பா தீவுக்கு தப்பிச் செல்லுதல்..இங்கிலாந்து அரசிடம் 1815 ல் அடைக்கலம் புகுந்து ஹெலெனாத் தீவில் சிறை வைக்கப் படுதல் ..போன்ற பல செய்திகள் அடங்கிய, நெப்போலியன் என்ற "போர்க்களப் புயல் "பற்றிய நூல் இது.        ...

பாடுக பாட்டே(நாஞ்சில் நாடன்)

_____________________________ பாடுக பாட்டே (நாஞ்சில் நாடன்) ______________________________         புலவர் என்பவர் பாடல் இயற்றுபவர் என்று அறியப்பட்டனர்.கவிஞர், கவிதாயினி என்ன பிற்காலத்தவை. பாட்டு எழுதும் ஊக்கம் உடையவர் எல்லாம் புலவரே.        கபிலர், பரணர், ஔவையார், வெள்ளிவீதியார்.... போன்ற பலர்..         வறுமையை, துன்பத்தை, இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை பாட்டாக பாடி வைத்தனர்.      "வித்தை விரும்பு " "தோற்பன தொடரேல் " "கற்பெனப்படுவது சொல் திறம்பாமை " "கலக்கினும் தண்கடல் நீர் சேறாகாது " என்பன பாடல் வரிகள்.        பாடுக பாட்டே என்னும் இந்தத் தொடரின் பொருள்.. சிறப்புகளை பாட்டாகப் பாடுவாயாக என்பது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் சாத்தியமான சில பாடல்களின் சிறப்புகளை இந்நூலில் பாடியுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.                   (விலை : ரூ 150)                   (விஜயா பதிப்பகம்)

விடுபூக்கள் (தொ.பரமசிவன்)

 விடுபூக்கள் (தொ.பரமசிவன்) _________       மாலை கட்டிய பின் எஞ்சிய பூக்களை திருநெல்வேலி பகுதியில் விடுபூக்கள் என்பார்கள்! இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் இது போல் தான்!       ஆசிரியரின் (தொ.ப)  புத்தகங்களில் இடம் பெறாமல் விடுபட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்!        எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ் பண்பாட்டின் வேர்களை எடுத்துரைத்து வரும் தொ.ப..அவர்களின் தொடர் பயணத்தில் இத்தொகுப்பு, இன்னும் கவனம் பெறாத சிலவற்றை முன்வைத்து நகர்கிறது!         தமிழ்ச் சமூக வாழ்வியலைக் கருத்தியல் நிலையில் நினைவுபடுத்தும் இக்கட்டுரைகள், அடிப்படை அரசியலை,  கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன!📚          (கயல் கவின் பதிப்பகம்)

விரலோடு வீணை (இந்துமதி)

 விரலோடு வீணை (இந்துமதி) ___________        சிங்காரம்.. அகம்பாவம் மிக்க, சினிமா ஆசை மிக்க மோகனாவை மணந்ததால் அவர் வாழ்வு வீணானது. மகள் ஷைலஜாவை வளர்க்க தாயுமானவர் ஆனார்.          மகளும், மனைவியின் குணத்தைக் கொண்டதனால்.. ஜவுளிக்கடையில் வேலை செய்யும் அவர், கடன் பெற்று மகளின் தேவையை நிறைவு செய்ய வேண்டியதாயிற்று.அவர் மறைந்தபின் அப்பாவின் அருமை புரிகிறது மகளுக்கு..         ஷைலஜா தான் விரும்பிய விஸ்வநாதன், மல்லிகா என்ற தன் அத்தைப் பெண்ணை மணந்ததால் அவர்கள் வாழ வழியில்லாமல் செய்கிறாள்.. இறுதியில் தவறை உணர்ந்து வருந்துகிறாள். மனப்புழுக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள் .. தன் நிலை அறியாமல் தேவையில்லாதப் பொருளுக்கு ஆசைப்படும் ஒரு பெண்னின் மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டும் புத்தகம் இது..               (விலை : ரூ 248)               (ராஜராஜன் பதிப்பகம்)

காமராஜ் ஒரு சரித்திரம்(முருக.தனுஷ்கோடி)

_________________________ காமராஜ் ஒரு சரித்திரம் (முருக.தனுஷ்கோடி) _________________________        இந்த நூற்றாண்டில் தமிழகத்தின் மகத்தான சரித்திர நாயகன் காமராசர்! புகழையும், பழியையும் சமமாக மதித்து, பற்றற்று, நாட்டுக்குத் தம் வாழ்நாளை அர்பணித்த பண்பாளர்!        நமது நாட்டு அரசியலில் மிகமிக எளிமையாக, அமைதியாக, முன்னுதாரணமாகத் தொண்டாற்றியவர்! இத்தலைவரின் வாழ்கை வரலாறு தான்  "காமராஜ் ஒரு சரித்திரம் "என்னும் இந்நூல்!       பள்ளிப்பருவத்தில் இருந்து காமராசரை அறிந்தவர் தனுஷ்கோடி அவர்கள்!        அதனால்தான் இந்த நூலில் யாரும் சொல்லாத விசயங்கள் அடங்கியிருக்கின்றன! சரியாக எழுதப்பட்ட இந்த வரலாறு, தலைவருக்கு ஒரு மணிமண்டபம்! 📚       (பூம்புகார் பதிப்பகம்)

சிந்தனைத் துளிகள்(தவத்திரு குன்றக்குடி அடிகளார்)

______________________________ சிந்தனைத் துளிகள் (தவத்திரு குன்றக்குடி அடிகளார்) _______________________________         மனிதன், மனிதம் என்ற புனிதத்தன்மையுடன் வாழவும், வாழ்விக்கவும் மகான்களின் அருட் சிந்தனைகளே உறுதுணை.        உயிர்க்கும், உள்ளத்திற்கும் உறுதி சேர்ப்பன.இம்மை, மறுமை நலன்களை அளிப்பவை.       உண்பித்து உண், வாழ்வித்து வாழ், மகிழ்வித்து மகிழ் என்னும் திருக்குறள் நெறி உலகெல்லாம் நிலவி மகிழ, நாளும் தன் தவ அனுபவத்தால் வாழ்ந்த குன்றக்குடி அடிகளார் அருளிய அருட்சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல்.        திருவள்ளுவரையும், வள்ளலாரையும் பின்பற்றி நடந்தால் வாழ்வில் உயரலாம் என்று உலகம் உய்ய வழி சொல்லும் நூல் இது..                (விலை : ரூ 50)                (கற்பகம் புத்தகாலயம்)

ஆயிரம் அரிவாள் கோட்டை(இந்திரா சௌந்தரராஜன்)

_________________________________ ஆயிரம் அரிவாள் கோட்டை (இந்திரா சௌந்தரராஜன்) _________________________________            இப்புத்தகத்தில் இரண்டு குறுநாவல்கள் உள்ளன.       முதலில் "திரும்பும் அம்புகள் " நாவலில் வாழ்க்கையில் நாம் செய்த தவறுகளே.. அம்புகளாகி நாம் அயர்ந்திருக்கும் போது மார்பில் வந்து தைக்கின்றன என்ற கருத்தை உணர்த்துவதாக உள்ளது.          மற்றொரு கதையான "ஆயிரம் அரிவாள் கோட்டை " கதையில் "சங்கிலிக் கருப்பர் " என்ற கிராமத்து தெய்வத்தைப் பற்றியும், கிராமப்புற மக்களின் பழக்க வழக்கங்களும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார் ஆசிரியர்.        இரண்டு நாவல்களும் திகட்டா கற்கண்டு... வித்தியாசமாக எழுதுவதினாலேயே இவரது எழுத்துகள் வெற்றி பெறுகின்றன..                       (விலை : ரூ 75)                  (திருமகள் பதிப்பகம்)      

கந்தர்வன் கதைகள்(தொகுப்பு : பவா செல்லதுரை)

___________________________________ கந்தர்வன் கதைகள் (தொகுப்பு : பவா செல்லதுரை)  ____________________________________           இச்சிறுகதை தொகுப்பில் "சீவன் " முதல் "அவரும் பாவம்.. " ஈறாக 61 சிறுகதைகள் உள்ளன. காடு வரை, தராசு, தூக்கம், பத்தினி ஓலம், துண்டு, சனிப்பிணம் முதலிய கதைகளும் உள்ளடக்கம்..         முதல் கதை "சீவன் " அறிவொளி இயக்கத்தில் சிறு நூலாக வெளியிட்டு, பல்லாயிரம் பிரதிகள் மக்களிடம் சேர்த்தார்கள். ஆசிரியர் ஊரின் முனியசாமி கதை..         தொழிலாளர் பிரச்சனையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை  "பொய் விதிகள் ".. அப்பாவைப் பற்றி நிறைய கதைகளில் எழுதி இருக்கிறார். "தராசு "  "அப்பாவும் மகனும் " என்ற கதைகள்.           எல்லா கதைகள் தனித்துவம் மிக்கவை.. கதைகளை வாசிக்கும் போது நம்மை அதனில் பொதிந்து மூழ்கச் செய்பவை..அதில் அமிழ்ந்து போக ஆசைப்பட வைப்பவை. கந்தர்வன் கதைகள் வாசிப்பவரை காந்தம் போல் இழுக்கும்.. உண்மை..                   (விலை : ரூ ...

திருச்சிற்றம்பலம்(ஜெகசிற்பியன்)

___________________________ திருச்சிற்றம்பலம் (ஜெகசிற்பியன்) ____________________________      ஓவியர் கோபுலுவின் படங்களுடன் அற்புதமாக விகடனில் வெளிவந்து வாசிப்பவரின் உள்ளத்தை வசியப்படுத்திய புதினம்.       தில்லை நடராசர் ஆலயத்தை விரிவுபடுத்தி, பெரிதாகக் கட்ட விரும்பிய அநபாய குலோத்துங்கச் சோழன், கோயிலில் இருந்த கோவிந்தராசப் பெருமாளை அகற்றி, கடலில் அமிழ்த்த முயல, அரசகுல போட்டிப் பங்காளிகள் அந்த நிகழ்ச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்தனர்.        இந்தப் பூசல்களின் பின்னணியில் பக்தியும் காதலும் பின்னி எழுதப்பட்ட புதினம் இது.        ஏழிசைவல்லவி, காடவராயர், பரிவாதினி, காளத்திதேவன் ..மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்..                   (விலை : ரூ 225)                   (வானதி பதிப்பகம்)

உலகை உலுக்கிய வாசகங்கள் (வெ.இறையன்பு)

 உலகை உலுக்கிய வாசகங்கள் (வெ.இறையன்பு) _________        102 வாரங்கள் தினத்தந்தி நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவந்த போதே வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது!       இந்நூலை வாசிக்கும் வாசகர்களின் மனதை உலுக்கிவிடும் ஆற்றல் கொண்டது! ஒரு புத்தகம் என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு,  இந்த நூல் படிப்பதற்கு முன் இருந்த மனநிலைக்கும், படித்து முடித்தபின் உள்ள மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே! இது இறையன்பு அவர்களின் வெற்றி!        பத்து நூல் வாசித்த அனுபவம் ஒரு நூலில் கிடைக்கிறது! "ஆழமாக வாசிப்பது அறிவை வளர்க்கும் "இந்த நூலின் முதல் கட்டுரையின் தலைப்பு! "உலகின் முதல் புரட்சியாளர் புத்தர் " "அலெக்ஸாண்டரின் கல்லறை வாசகம் " இப்படி நூலின் தலைப்பே கட்டுரைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்வண்ணம் உள்ளன!     பல்வேறு உலகப்புகழ் ஆளுமையாளர்களின் சிறப்பை, பண்பை, ஆற்றலை கட்டுரைகளின்மூலம் நன்கு உணர்த்தியுள்ளார் ஆசிரியர்!      432 பக்கங்கள் கொண்ட மாபெரும் தகவல் களஞ்சியம்! 📚         (தினத்தந்தி பதிப்பகம...

வீடில்லா புத்தகங்கள்(எஸ்.ராமகிருஷ்ணன்)

_____________________________ வீடில்லா புத்தகங்கள் (எஸ்.ராமகிருஷ்ணன்) _____________________________        சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை "வீடில்லா புத்தகங்கள் "  என்பார்..பெண் எழுத்தாளர் "வர்ஜினியா வுல்ப் " .        நாம் அறிந்திராத பல அரிய நூல்களை அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல்.       இந்நூலின் மூலம் குறைந்தது 170 புத்தகங்களை அறிமுகம் செய்து வைக்கிறார் எஸ்.ரா. அவர்கள்.        சிறப்பு என்னவெனில் இப்புத்தகங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு துறை சார்ந்து எழுதப்பட்ட அற்புதமான நூல்கள்.ஆதலால் நாம் பல துறைகளில் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வாசலாக அமைகிறது.          பழைய புத்தகக் கடையில் பல அரிய நூல்களை வாங்கியதாகவும், அவற்றை அறிமுகம் செய்யலாம் என்று "வீடில்லா புத்தகங்கள் " தொடரை எழுதியதாகவும் கூறுகிறார் ஆசிரியர்.         இளைய சமுதாயத்தினர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். வாசிப்பை நேசிப்பவர்களுக்கு இந்நூல் வரப்பிரசாதம் ..         ...

லட்சுமி(அநுத்தமா)

_______________________________ லட்சுமி (அநுத்தமா) ________________________________           ஏழை இளம்பெண் லட்சுமி, தன் தந்தையை இழந்து.. பைத்தியக்கார தாயுடன் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடுகிறாள்.        நல்லவர்களின் அரவணைப்பும் பொல்லாதவர்களின் சூழ்ச்சியும் ..ஏணியும் பாம்புமாக ஏற்ற இரக்கத்துடன் வாழ்வு நடக்கிறது. பலவகையான குணங்களை உடைய மனிதர்கள்  வாழும் ஆத்மநாதய்யர் வீட்டில் தன் சாமர்த்தியத்தால் வாழும் லட்சுமி ஓர் அபூர்வ சித்திரம்.          நிர்மலா, சரஸ்வதி,  வச்சலா, டாக்டர் சீனு, கேதகி இப்பாத்திரங்களின் குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பதை கதையை வாசிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவரும் உணர்வார்கள்..            மனதில் தோன்றிய எண்ணங்களும், பிரச்சனைகளுமே இப்புதினம்.         ஆரவாரமற்ற நடை.. பரபரப்பு இல்லாத நிகழ்ச்சிகள் .. திடுக்கிடும் சம்பவங்கள் இல்லாத கதை.         நம்நாட்டுப் பண்புக்கு அணிகலன் போன்ற சிந்தனைகளை எழுப்பும்...

சிதறல்கள்(பாவண்ணன்)

_________________________ சிதறல்கள் (பாவண்ணன்) ___________________________        ஆலை பூட்டப்பட்ட போது அதை நம்பி வாழ்ந்த மக்களின் படிப்படியான சிதைவுகளும், அழிவும் சித்தரிக்கப்படுகிறது.       ஆலை மூடப்பட்டவுடன் முதலாளிகள் தங்கள் வேலையை பார்க்க போய்விடுவார்கள். தொழிலாளர்கள் வாழ்வில் அடுத்தடுத்து நடக்க வேண்டி நிகழ்வுகள் நின்றுபோய் விடுகின்றன.        ஆலைமூடப்பட்டவுடன் அதில் வேலை செய்த மக்களின் அவலங்களையும், தினப்படி பிரச்சனைகளையும் பேசும் நூல்.         ஆலை அவர்களுக்கு தொழில்கூடம் மட்டுமல்ல .. மண்ணைப் போலத்தான்..அதனுடன் உணர்வு ரீதியான உறவு உண்டு.        தமிழ் மனதிற்கும், நவீன யுகத்திற்கும் உள்ள உறவை அவலச்சுவையுடன் கூறும் படைப்பு.               (விலை : ரூ 140)               (நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

போதிதர்மா(கயல் பரதவன்)

_________________________ போதிதர்மா (கயல் பரதவன்) _________________________        காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பௌத்த சந்நியாசியாகப் பேர் பெற்றதுடன், ஜென் பௌத்தத்தையும், குங்பூ என்ற தற்காப்புக் கலையையும் உலகிற்குக் கற்றுத் தந்த தமிழராக கருதப்படும் போதிதர்மாவின் காலகட்ட அரசியலை விவரிக்கும் புதினம்!       தமிழக வரலாற்றுடன், அக்காலகட்ட மக்களின் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்து பல தகவல்களுடன் இப்புதினத்தைக் கொண்டு செல்கிறார் ஆசிரியர்!       அரசியல் சூழ்ச்சிகளால் காஞ்சியிலிருந்து தப்பிச் செல்லும் இளந்திரையன் பிக்குணிகள் கூட்டத்தோடு சேர்வதும், தான் யார் என்று அடையாளம் இல்லாமல் இருப்பதும், பின்னர் நினைவு திரும்பி தனது கலைகளைப் போதிப்பதுமான பல திருப்பங்களுடன் செல்கிறது கதை!     நான்கு பாகங்களும் சுமார் 2800 பக்கங்களுக்குமேல் உள்ளது! 📚          (நர்மதா பதிப்பகம்)

இரண்டு முகங்கள்(ஜோதிர் லதா கிரிஜா)

_______________________________ இரண்டு முகங்கள் (ஜோதிர் லதா கிரிஜா) ________________________________         1992 முதல் 1995 முடிய பல வார, மாத இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு  "இரண்டு முகங்கள் "        இரண்டு முகங்கள், போதும் வாழ்ந்தது, சபலம், அப்பா வேண்டாம் உள்ளிட்ட 25 சிறுகதைகளை உள்ளடக்கியது. இவை பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்தவை.         இத்தொகுப்பில் " புல்லும் கிடைக்காத புலிகள் " கதை 1990 ல் வெளிவந்தது. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மாற்றி , மனிதனுக்கு மதி இருந்தால் புல்லையும் தின்னலாம் என்ற கருத்தோடு.. புதிய பாதையைக் காட்டியுள்ளார் ஆசிரியர்.          கதைப் போக்கோடு ஒன்றச் செய்து நம்மையும் கதை உலகில் அழைத்துச் செல்வதில் வல்லவர்.. ஆசிரியர்.. ஒவ்வொரு கதையும் வாசிப்பவருக்கு வசப்பட்டு, மனதைத் தொட்டு, வருடும் பொதிகைத் தென்றல்..                (விலை : ரூ 150)               (சேது அலமி பிரசுரம்)

மீதமிருக்கும் சொற்கள்(அ.வெண்ணிலா)

_________________________________ மீதமிருக்கும் சொற்கள் (அ.வெண்ணிலா) __________________________________           1930 முதல் 2004 முடிய உள்ள காலகட்டத்து பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.          வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்மணி பார்த்தசாரதி, குமுதினி, லட்சுமி, கோமகள், அநுத்தமா போன்ற சிலர் கதைகள் குடும்ப உறவை தாண்டாதவை.           கால ஓட்டத்தில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. இத்தொகுப்பில் உஷா சுப்பிரமணியனின் "எனக்கும் ஒரு கதையுண்டு " குறிப்பிடப்பட வேண்டிய கதைகளில் ஒன்று. பாட்டி - அம்மா - பேத்தி என்ற மூன்று தலைமுறை உறவுகள் அலசப்படுகின்றன.         புலம் பெயரும் இந்திய மேல்தட்டினர் அமெரிக்க மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக இருக்க வேண்டிய அவலம் இவற்றைக் கூறும் காஞ்சனாவின் "கண்ணி "  வித்தியாசமான தத்துவப் பார்வையுடன் கிருத்திகாவின் "தீராத பிரச்சனை " ஆண் துணையின்றிப் பிள்ளை வளர்க்கும் அவலத்தைக் கூறும்  செண்பகம் ராமசாமியின் "சரோஜா தேவியின் கதை "..      தில...

அழகின் ஆராதனை (லட்சுமி)

 அழகின் ஆராதனை (லட்சுமி) _____________            இப்புத்தகத்தில் இரண்டு குறுநாவல்கள் இடம் பெற்றுள்ளன.            "உன்னை விடவா ரம்யா " என்ற குறுநாவலில் வரதட்சணை குறித்த பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் கதையோட்டத்தில் தந்திருக்கிறார் ஆசிரியர்.            "அழகின் ஆராதனை " இந்த நாவலில் படித்து பட்டம் பெற்று  பதவியில் இருக்கும் ஆண்களும், பெண்களும் தம்பதியர் ஆனதும்.. சிலருக்கு எதிர்கால வாழ்வு குறித்து கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு வேறுபாடு இக்கதையில் வரும் தம்பதியருக்கு ஏற்படுகிறது.            குழந்தை இப்போது வேண்டாம் என்பதே அது. குழந்தை கருவில் வளர்வது உருவாகிவிட்ட நிலையில் .. அதற்கு தீர்வு கூறும் ஆசிரியரின் பாணி சுவாரசியம் ..  வாசியுங்கள். அருமையான கதை..                    (விலை : ரூ 80)                    (பூங்கொடி பதிப்பகம்)

தமிழா, கேள்! (கவிஞர் வேழவேந்தன்)

 தமிழா, கேள்! (கவிஞர் வேழவேந்தன்) _________       தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரை சூட்டத் தயங்குவது, வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர் இல்லாமை, லஞ்ச ஊழல், மூடத்தனமான வழிபாடுகள் போன்றவற்றை ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டும் கவிதைகள் சிந்தனையைத் தூண்டுகின்றன!      தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கலைஞர், ஆதித்தனார் உள்பட பல பெரியோர்களைப் போற்றி எழுதிய கவிதைகள் இளைய சமுதாயத்திற்கு அவசிய தேவை போல அமைந்திருக்கின்றன! 📚         (மாணிக்கவாசகர் பதிப்பகம்)