Posts

Showing posts from March, 2021

சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, தமிழில்...கே.வி.ஷைலஜா

______________________________________ சிதம்பர நினைவுகள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடு) தமிழில்...கே.வி.ஷைலஜா ______________________________________         இது ஒரு கவிதை நூல் அல்ல. கவிதையைப் போல் வாழ்ந்த கவிஞனின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள்.         தம் மனதில் ஏற்பட்ட காயங்கள்.. வடுக்கள் .. அகற்ற முடியாத அவமானங்கள்..சறுக்கல்கள் .. முதலியவற்றை மனம் திறந்துக் கூறுகிறார்.       வாசிப்பவர்களுக்கு மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வு ஏற்படாமல் மூலநூலைப் படிப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும் வகையில் எளிய, இனிய தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ஷைலஜா அவர்கள்.        "வாழ்வில் சில நினைவுகள் மங்கி மறைந்து போகாமல் மனதில் மீண்டும் மீண்டும் அலை மோதிக் கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்வுகளை வார்த்தைகளில் கோர்த்துப் பார்க்கத் தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்த வாழ்க்கைக் குறிப்புகள் " என்று ஆசிரியரே (பாலச்சந்திரன் சுள்ளிக்காடு) கூறியுள்ளார்.                   (விலை : ரூ 150)   ...

மலர் மஞ்சம் - தி.ஜானகிராமன்

_______________________________ மலர் மஞ்சம் (தி.ஜானகிராமன்) _______________________________          ராமையாவின் நான்காவது மனைவி பெண்ணைப் பெற்றவுடன் மாப்பிள்ளையையும் நிச்சயித்து விட்டு மரணிக்கிறாள்.ராமையா அந்தப்பெண் பாலாம்பா (பாலி)யை, சொர்ணாக்கா மகன் தங்கராசுக்குத் திருமணம் செய்து வைக்க மேற்கொள்ளும் முயற்சியே கதை.        நடுவில் வக்கீல் பேரன் ராஜாவால் பாலிக்கு வரும் சஞ்சலம் எப்படி தீந்தது என்பதை அலுப்பு தட்டாத வகையில் சொல்லி இருக்கிறார் தி.ஜா அவர்கள்.        ராஜாங்காடு என்னும் கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை, தஞ்சாவூர் சென்று, சென்னை சென்று, காசியில் முடிவடைகிறது.        கோணவாய் நாயக்கர், வக்கீல், நாயக்கர் மகன், பெரியசாமி, செல்லம்மா என அனைத்துப் பாத்திரங்களையும் படிப்பவர் மனதில் தக்க வைத்துவிடுவார் தி.ஜா.        ஆசிரியரின் நூல்கள் அனைவருக்கும் பிடிப்பதற்கு, அவரின் உரையாடல்களும், பாத்திர அமைப்பும், அப்பாத்திரங்களை வாசிப்பவர் மனதில் நடமாட விடுதலும் காரணமாக அமையலாம்..       ...

முல்லைக்காடு - பாவேந்தர் பாரதிதாசன்

________________________________ முல்லைக்காடு (பாவேந்தர் பாரதிதாசன்) _________________________________       இயற்கைப் பகுதி, தமிழகப் பகுதி, காதற் பகுதி, நகைச்சுவை பகுதி, சிறுவர் பகுதி என 5 பகுதிகளைக் கொண்டது இந்நூல். சுமார் 30 கவிதைகளைக் கொண்டது. சோலை .. ______________ வானவில் ஏந்தல் கண்டு மாந்தளிர் மெய் சிவக்கத், தேனுந்தும் மலர்க் குலங்கள் செம்மக ரந்தம் தூவ, ஆனந்தத் தென்றல் மெல்ல ஆலவட்டம் பிடிக்க வானவில் மறைய, மாலை  மல்லிகை சிரிக்கும் சோலை... மாணவர்க்கு எழுச்சி... _________________________ கற்பதில் முதன்மை கொள்! காண்பதைத் தெரிந்து கொள்! எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே....  அருமையான கவிதைகள் நிறைந்த அற்புதமானக் காடு..புரட்சிக்கவிஞரின் முல்லைக்காடு.. வாசிப்பீர்! இலக்கிய சுவை உணர்வீர்!                (விலை : ரூ 15)                (நாம் தமிழர் பதிப்பகம்)

கடல் புரத்தில் - வண்ணநிலவன்

________________________________ கடல் புரத்தில் (வண்ணநிலவன்) ________________________________          நூற்றிற்கும் அதிகமான பக்கங்களில் விரல் பிடித்து நெய்தல் நில மக்களோடு பழக வைத்துவிட்டார் ஆசிரியர்.        கடல்புரத்து மக்களின் வாழ்வை குரூஸ் மிக்கேல், மரியம்மை, அமலோற்பவம், பிலோமி பாத்திரங்களின் வழியே பதிவு செய்கிறார்.       துரோகம், வஞ்சம், தொழில் போட்டி இவைகளை எல்லாம் மீறி அவர்களுக்கிடையே அனைவரையும் ஒருங்கிணைக்கும் அன்பிருக்கிறது. சொல்லப்படாமல் அவர்களுக்குள்ளே பிரியம் வெளிப்படும் தருணங்கள் பெருமூச்சு விடச்செய்யும்.       "கடல் புரத்தில் "நடந்து வந்தபின் (வாசித்து முடித்த பின்) காலிடுக்குகளில் இருக்கும் மணல் துகள்களை அவ்வளவு எளிதில் உதற மனம் வருவதில்லை.                 (விலை : ரூ 110)                 (கிழக்கு பதிப்பகம்)

47 நாட்கள் - சிவசங்கரி

_________________________________ 47 நாட்கள் (சிவசங்கரி) __________________________________         மணமகனை (குமார்)  சரியாக தேர்வு செய்யாததால் அவனை மணம் செய்த பெண் (விசாலி) அவனால் துன்பப்பட்டு 47 நாட்களில் அவள் திருமண வாழ்வு முடிகிறது.         குமார் - விசாலி திருமணம் முடிந்தவுடன் வெளி நாட்டிற்க்குக் கூட்டிச் செல்கிறான்.அங்கு அவனுக்கு ஏற்கனவே வெள்ளைக்காரியுடன் (லூசி)  திருமணம் நடைபெற்றுள்ளது.குமார் விசாலியை தங்கை என்று எல்லோருக்கும் அறிமுகப் படுத்துகிறான்.உண்மையை சொன்னால் கஷ்டப்படுவாய் என பயமுறுத்துகிறான்.          அங்கிருந்து தப்பிக்க பல முயற்சி செய்கிறாள். அம்முயற்சிகள் எல்லாம் கணவனால் கண்டுபிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகிறாள். பின்பு ஒரு டாக்டரின் உதவியுடன் தாய்வீடு வருகிறாள். 47 நாட்களும் நாமும் விசாலியுடனே பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.                 (விலை : ரூ 100)                 (கங்கை புத்தக நிலையம்)

அலெக்சாண்டர் கிரஹாம்பெல் - இலந்தை.சு.ராமசாமி

_______________________________ அலெக்சாண்டர் கிரஹாம்பெல் (இலந்தை.சு.ராமசாமி) ________________________________         தொலைபேசியை கண்டுபிடித்தவர்..ஹார்மானிக் டெலிகிராஃபியைக் கண்டுபிடித்தவர்..விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்..        காது கேளாதவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்.. ஒரு வட்டத்துக்குள் சிக்காத மாமேதை..       தன் வாழ்நாளில் பகுதி நேர கண்டுபிடிப்பாளராக இருந்தவர்.பகுதி நேர கண்டுபிடிப்பே இவ்வளவு பிரமாண்டம் எனில் மனிதர் எப்படி இயங்கி இருக்கிறார் என்று யோசிக்க முடியும்.       இந்தச் சாதனையாளரின் வாழ்க்கை உங்களை சிலிர்த்துக் கொண்டு மேல் எழச்செய்யும்.                (விலை : ரூ 170)                (கிழக்கு பதிப்பகம்)

லத்தீன் அமெரிக்கா :நம்பிக்கையின் கீற்று - ரா.விஜயசங்கர்

______________________________ லத்தீன் அமெரிக்கா : நம்பிக்கையின் கீற்று (ரா.விஜயசங்கர்) _______________________________        லத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்படும் தென் அமெரிக்காவில், ஸ்பெயின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய வரலாறும், வட அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவான ஆரம்ப கால வரலாறு, லட்சக்கணக்கான கறுப்பின மக்கள், செவ்விந்தியர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் கண்ணீரையும், உதிரத்தையும் உள்ளடக்கியதாகும்.        அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் ஓரத்தில் ஓர் "அக்கினிக்குஞ்சு " கியூபா! சோசலிசத்தீயினை அணைப்பதில் அயராது ஈடுபடும் அமெரிக்காவினை அதன் ஜன்னலிலிருந்தே பார்க்குமளவிற்கு நெருங்கி இருந்த ஒரு தீவிலிருந்து எழுந்து வந்த தீப்பந்தம் இன்று வரை வியக்கச் செய்து கொண்டுள்ளது.         சொல்லப்போனால் தென் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய மக்களின் அரசியல் விழிப்புணர்வு புதிய உலகை அமைக்கும் என்பது சர்வ நிச்சயம்.                  (விலை : ரூ 25)                 ...

பாட்டு பிறக்குமடா - வாணிதாசன்

_______________________________ பாட்டு பிறக்குமடா (வாணிதாசன்) ________________________________         இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் இசைப்பாடல்கள்.73 பாடல்கள் உள்ள கவிதைக்களஞ்சியம்.        "பாரதிதாசனின் பெயரை உரைத்திட பாட்டு பிறக்குமடா " என்ற எடுப்பில் ஆசிரியரிடம் அவர்  கொண்ட அன்பின் பெருக்கை நாம் உணர முடியும்.        எளிய நிகழ்ச்சிகளையும், காட்சிகளையும் படம்பிடித்து ..உயிர் அளித்து ..மகிழ்ச்சிக்குரிய வனப்புடையதாக்கி உள்ளார். "கட்டை சிறுதிண்ணை மீதமர்ந்தே என் கருத்தெல்லாம் உன்பால் செலுத்திவிட்டே! பட்டுடல் பூனையின் மெய்வருடி  கூரை  பாய்ந்து வரும் அணில் பார்ப்பேன்!" என்னே! இயற்கை வர்ணிப்பு... "வாழப்பொருள் தேவை அறிவிலார் நீதி.. பொன்னல்ல வாழ்க்கைக்கு வேண்டியது ; உள்ளம்.." என வரும் அடிகள் "ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தரற்கு " என்னும் கலித்தொகைப் பாடலை நினைவூட்டும்.      அகமும் புறமும் இந்நூல் முழுவதும் வெற்றி நடை போட்டுச் செல்லும்.படியுங்கள்! பயனுறுங்கள்!

நல்வழி, நறுந்தொகை (மூலமும் உரையும்) - ந.மு வேங்கடசாமி நாட்டார்

______________________________ நல்வழி, நறுந்தொகை  (மூலமும் உரையும்)  (ந.மு வேங்கடசாமி நாட்டார்) ________________________________       அறநூல்கள் தமிழில் அளவிலாது உள்ளன.அவற்றில் ஔவையார் பாடிய நல்வழியும், அதிவீரராம பாண்டியன் பாடிய நறுந்தொகையும் தமிழின் பொக்கிஷங்கள் .       இப்பாடல்கள் எளிமையும், இனிமையும் கலந்தவை. இந்நூல்களுக்கு, நாவலர். வேங்கடசாமி நாட்டார் மிகச்சிறப்பானதொரு உரையைத் தந்துள்ளார்.       சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் படிக்கக் கூடிய வகையில் அமைந்த அரியதொரு உரை நூல் இது. "கல்விக்கழகு கசடற மொழிதல் " "பெருமையும் சிறுமையும் தான்தர வருமே "📚                  (விலை : ரூ 30)                  (சாரதா பதிப்பகம்)

கோடுகள் இல்லாத வரைபடம் - எஸ்.ராமகிருஷ்ணன்

________________________________ கோடுகள் இல்லாத வரைபடம் (எஸ்.ராமகிருஷ்ணன்) _________________________________       வாசிக்க வாசிக்க பெரு வியப்பும், நாமும் இது போல பயணிக்க முடியாதா? என்ற ஏக்கத்தைக் கொடுக்கும் நூல் இது.       உலகைச் சுற்றி வந்த 13 பயணிகளைக் குறித்த கட்டுரைத் தொகுப்பு.        இந்நூலில் கடலோடிகளாக இந்தியா வந்த மார்க்கோபோலோ, வாஸ்கோடகாமா, அல்பெர்க்யூ, மற்றும் யுவாங்சுவாங், அல்பெருனி போன்ற அறிஞர்களைப் பற்றி அறியும்போது ஆச்சரியமாக இருக்கும்.        "கோடுகள் இல்லாத வரைபடம் " வாசித்து முடித்ததும் எங்கேனும் பயணிக்க வேண்டும்.. புதிய இடங்களை ..புதிய மக்களைப் பார்க்க வேண்டும்.. என்ற ஆவல் எழுவது எஸ்.ரா அவர்களின் எழுத்து செய்யும் மாயமாக இருக்கும்.📚                (விலை : ரூ 75)                (தேசாந்திரி பதிப்பகம்)

சுமித்ரா - மலையாளம் : கல்பட்டா நாராயணன் - தமிழில்...கே.வி.ஷைலஜா

_________________________________ சுமித்ரா (மலையாளம் : கல்பட்டா நாராயணன்) தமிழில்...கே.வி.ஷைலஜா __________________________________       மலையாளத்தில் "இத்ரமாத்திரம் " என்ற இவரது புதினம் தமிழில் "சுமித்ரா " என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.       சுமித்ரா இறந்துவிட்டாள். இந்த ஒற்றை வரி தான் மொத்தப் புதினமும்.இந்த ஒற்றை வரிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையும் அடங்கியுள்ளது.       சுமித்ராவின் கணவன், மகள், தோழியர் கீதா சுபைதா, அப்பு, மரியா, தாசன், மாதவி ..என்று அவளுடன் பழகியவர்கள், அவளது அன்பைப் புரிந்து கொண்டவர்கள், அவளைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள், அவளது மரணத்தின்மூலம் தன்னை உணர்ந்து கொண்டவர்கள் .. பலரது நினைவுகளில் அன்று சுமித்ரா வந்து செல்கிறாள் .       புதினத்தின் முடிவில் கல்பட்டா நாராயணன் கூறுகிறார் "மரணத்தின் சந்நிதியில் அதிக நேரம் நிற்பதற்கான திராணி மனிதர்களிடம் குறைந்து கொண்டே வருகிறது ." இது நிதர்சனமான உளவியல் உண்மை.        வாசிப்பவர்கள் கல்பட்டாவின் கவித்துவமான வரிகளில் கரைந்துதான் போவார்...

நேசம் - லா.ச.ராமாமிருதம்

_______________________________ நேசம் (லா.ச.ராமாமிருதம்) ________________________________        இத்தொகுப்பில் 11 சிறுகதைகள் உள்ளன.முதல் கதை "மேனகை " யில் மனம் பக்குவப்படாத நிலையில் விரதமும் கட்டுப்பாடும் செயற்கையானதே என்பதைக் கூறும் ஆசிரியர் ..       "அப்பாவின் மீசை " கதையில் குழந்தைகள் எதிரில் பெற்றோர்கள் சண்டை போட்டால் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள் என்ற உளவியல் உண்மையை எடுத்துக்கூறுகிறார்.         "நேசம் " கதையில் நாகம் தீண்டி மனைவி இறக்க ..அந்தச் சூழலில் அவளை வைத்ததற்குத் தானே பொறுப்பு என்று நினைத்து பிராயச்சித்தம் தேட முயலும் ஒரு தாத்தாவின் நிலை இக்கதை.        "வேள்வி " ஒருவர் மீது தோன்றும் வெறுப்பு இடம்மாறி வேறு திசையில் பாய்வதை கதை விளக்கும்.         இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் வேறுவேறு மாதிரி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.                (வானதி பதிப்பகம்)

பெரிதினும் பெரிது கேள் - த.செந்தில்குமார்

______________________________ பெரிதினும் பெரிது கேள் (த.செந்தில்குமார்) _______________________________        இளைஞர்கள் ஒவ்வொரு நாளையும் புதுமையான விசயங்களோடு தொடங்க வேண்டும்.       ஒரு வேலையைப் புதுப்புது கோணங்களில் அணுக வேண்டும்.அவர்கள் வெற்றியை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.        சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தியாகம் செய்த தியாகிகள், தமிழ்மொழியைப் போற்றி வளர்த்த பழம்பெரும் இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தஞ்சை பெரிய கோயிலின் சரித்திரம், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் என இந்த நூலெங்கும் அரிய தகவல்களைத் தந்துள்ளார் ஆசிரியர்.       அரிதினும் அரிய தகவல்களைக் கொண்ட பெட்டகம் இந்நூல்.                   (விலை : ரூ 420)                   (விகடன் பிரசுரம்)

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

_________________________________ கறுப்பு மலர்கள் (நா.காமராசன்) __________________________________         உலகத்தின் பல பாகங்களிலிருக்கும் கவிதை நாகரீகத்தின் எதிரொலிகளை நூல் முழுக்கக் காணலாம்.        கவிதைக்கான கரு புதியது.. புதுமையானது..முதலில் மயக்கும்..பின் மயங்க வைக்கும்.        உருவகஅணியை உத்தியாக வைத்துக் கொண்டு உரைநடைக் கவிதை வடித்த உயரிய கவிஞர். புல் ...... ____________ வால் முளைத்த புல்லே! வசந்தத்தின் பச்சை முத்திரையே! உடல் மெலிந்த தாவரமே! உன்னை பனித்துளிகளின் படுக்கையறை என்பேன்!! கடல்.... _______________ முத்துகளின் பள்ளம்... கப்பல்களின் சமவெளி... நதிகளின் கல்லறை...       படிமக் கவிதை வடித்த உருவகக்கவிஞரின் கவிதைகளை வாசியுங்கள்...📚                 (விலை : ரூ 80)                 (கவிதா பதிப்பகம்)

ஒரு கிராமத்து நதி - சிற்பி பாலசுப்ரமணியம்

________________________________ ஒரு கிராமத்து நதி (சிற்பி பாலசுப்ரமணியம்) _________________________________          மண்ணுக்கும், அம்மண்ணில் பிறந்த மனிதனுக்கும் உள்ள தொடர்பு உடலுக்கும் உயிருக்கும் இருக்கின்ற தொடர்பைப் போன்றது.       சிற்பி..தன் கிராமத்து மக்களின் எளிய வாழ்வு, களங்கமற்ற பேச்சு, இயல்பான அணுகுமுறை ஆகியவற்றை பிறந்த மண்ணின்மேல் கொண்ட ஆசையின் தாகத்தோடு அசை போடுவதை இக்கவிதைகள் புலப்படுத்துகின்றன.         சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.                 (விலை : ரூ 80)                 (கவிதா பப்ளிகேஷன்ஸ்)

ஹெலன் கெல்லர் - க.சாந்தகுமாரி

_______________________________ ஹெலன் கெல்லர் (க.சாந்தகுமாரி) _______________________________       வட அலபாவில் "டஸ்கும்பியா " நகரில் 1880 ஹெலன் கெல்லர் பிறந்தார்.அழகாகப் பிறந்தாலும் ஒன்றரை வயதில் ஏற்பட்ட கொடிய நோயின் காரணமாக கண்பார்வையையும், பேச்சுத் திறனையும் இழந்துவிட்டார்.        ஸல்லியன் அவருடைய ஆசிரியர்.ஒவ்வொரு விஷயத்தையும் ஹெலன் சிறப்பாக செய்து முடிக்கத் துணை நின்றார் .12 வயதிலேயே கதை எழுதும் அளவுக்கு ஆற்றலை வளர்த்து விட்டவர் ஸல்லியன்.        ஹெலனுக்கு ஜெர்மானிய இலக்கியங்களில் நிறைய ஈடுபாடு உண்டு.ஹெலன் அவருடைய வாழ்க்கையைப் பற்றி எழுதிய "என் கதை " புத்தகத்தை தயார் செய்ய "ஜான்மேஸி " என்ற பேராசிரியர் உதவினார்.        முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு இவரின் கதை.        அன்னாரின் வாழ்க்கைச் சுருக்கத்தை அனைத்துதரப்பினரும் வாசிக்கும் வகையில் அழகிய தமிழில், எளிய நடையில் எழுதியுள்ளார் ஆசிரியர். மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நூல்களில் சிறப்பும...

பிரும்ம ரகசியம் - ர.சு.நல்லபெருமாள்

_______________________________ பிரும்ம ரகசியம்  (ர.சு.நல்லபெருமாள்) _______________________________         இந்திய தத்துவ ஞானங்களை எளிய முறையில் புரிந்து, ரசிக்கும்படியாக அமைந்த புத்தகம்.          நாஸ்திக தத்துவத்தில் இருந்து சைவ சித்தாந்தம் வரை இந்திய தத்துவங்களை.. கேள்வி - பதில் என்ற முறையில் எழுதப்பட்ட நூல்.         அந்தந்த தத்துவங்களை அருளிச் சென்ற மகான்களிடமே நேரடியாக பேட்டி கண்டு தத்துவ விளக்கங்களைப் பெறுவது போல் எழுதப்பட்டது.        தமிழக அரசினால் வழங்கப்படும் சிறந்த நூலுக்கான முதல்பரிசினை 1982 இல் இந்நூல் பெற்றது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல் இது.                     (விலை : ரூ 150)                     (வானதி பதிப்பகம்)