லட்சுமி(அநுத்தமா)
_______________________________
லட்சுமி
(அநுத்தமா)
________________________________
ஏழை இளம்பெண் லட்சுமி, தன் தந்தையை இழந்து.. பைத்தியக்கார தாயுடன் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடுகிறாள்.
நல்லவர்களின் அரவணைப்பும் பொல்லாதவர்களின் சூழ்ச்சியும் ..ஏணியும் பாம்புமாக ஏற்ற இரக்கத்துடன் வாழ்வு நடக்கிறது. பலவகையான குணங்களை உடைய மனிதர்கள் வாழும் ஆத்மநாதய்யர் வீட்டில் தன் சாமர்த்தியத்தால் வாழும் லட்சுமி ஓர் அபூர்வ சித்திரம்.
நிர்மலா, சரஸ்வதி, வச்சலா, டாக்டர் சீனு, கேதகி இப்பாத்திரங்களின் குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பதை கதையை வாசிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவரும் உணர்வார்கள்..
மனதில் தோன்றிய எண்ணங்களும், பிரச்சனைகளுமே இப்புதினம்.
ஆரவாரமற்ற நடை.. பரபரப்பு இல்லாத நிகழ்ச்சிகள் .. திடுக்கிடும் சம்பவங்கள் இல்லாத கதை.
நம்நாட்டுப் பண்புக்கு அணிகலன் போன்ற சிந்தனைகளை எழுப்பும் சிறந்த புத்தகம்..
(விலை : ரூ 200)
(ஜெனரல் பப்ளிஷர்ஸ்)
Comments
Post a Comment