கதவுகள் காப்பதில்லை(குலோத்துங்கன்)
______________________________
கதவுகள் காப்பதில்லை
(குலோத்துங்கன்)
________________________________
தமிழ்மொழியின் இயல்பை அறிந்து, தனது அறிவியல் ஞானம், கவிதை உள்ளம், செயலாற்றும் திறன் மூன்றையும் வெளிப்படுத்தும் விதமாகக் கவிதைகள் உள்ளன.
28 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.பாரதியைப் போல் "வேண்டுவ படைக்கும் ஆற்றல்! விதிக்கொரு விதி செய் திண்மை " வேண்டுதலுடன் தொகுப்பு ஆரம்பம் ஆகும்.சாதனை புரிவது எளிதல்ல என்று குறிப்பிடும் கவிஞர் மனதில் உறுதியுடன் "துன்பம் தவிர்த்த சுகம் தேடேன் " என்று மொழிகிறார்.
"புதிய மடங்கள் : பழைய அதிபர்கள் "கவிதையில் ஒவ்வொரு வரியும் ஓர் ஏவுகணையாக ஏய்த்துப் பிழைப்பவரை நோக்கிப் பாயும்.
(பாரதி பதிப்பகம்)
Comments
Post a Comment