வேலைக்காரி - அறிஞர் அண்ணா

________________________________
வேலைக்காரி
(அறிஞர் அண்ணா)
_________________________________
         கருத்துகளைப் பரப்பும் கலைக் கருவிகளுள் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.அவற்றுள் அண்ணாவின் வேலைக்காரி சிறப்பிடம் பெறுகிறது.
        வீட்டிற்கு வேலை செய்ய வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாக பலரும் பார்ப்பதே இல்லை.
     வேலைக்காரிக்கு மதிப்பைத் தேடித் தந்ததோடு அந்த இனத்திற்கே பெருமையைத் தேடித் தந்துள்ளார் அண்ணா இந்நூல் மூலம்.
      வேலைக்காரிக்கு நடக்கும் சமுதாயக் கொடுமைகளை கூற வந்த அண்ணா அவற்றோடு ஏழைகளின் கண்ணீர், ஜாதி வேறுபாடு, போலி வழிபாடு, பணக்காரர்களின் ஆதிக்கம் ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.
          பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்குச் சரியான அடியாக இந்த நாடகம் விளங்குகின்றது.
                  (விலை : ரூ 40)
                  (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்