ரோமாபுரிப் பாண்டியன்(முத்தமிழ் அறிஞர் கலைஞர்)
_________________________
ரோமாபுரிப் பாண்டியன்
(முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்)
_________________________
முதலில் முரசொலியிலும், பின்பு குமுதம் இதழிலும் தொடராக வெளிவந்தது!
கதையின் காலம் கி.மு 30 லிருந்து கி.மு 20வரை!
பாண்டியப் பேரரசன் ஒருவன் தனது தூதுவனை ரோமாபுரிக்கு அனுப்பினான் என்ற வரலாற்றுக் குறிப்பினைக் கொண்டு அதனைச் சுற்றி இப்புதினம் பின்னப்பட்டுள்ளது!
வரலாற்றுப் பாத்திரங்களும், கற்பனைப் பாத்திரங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன!
அந்தக் கால நாகரிகம், ஆடை அணிகலன்கள், சமூகப் பொருளாதார நிலை என்று பல செய்திகள் கொட்டிக் கிடக்கின்ற கருத்துக் கருவூலம் இந்நூல்!
ரோம்நகரின் அழகு,கலைஞரின் ஒப்புமைகள் ஆகியவை படிப்பவர்களின் மனதைக் கவர்திழுக்கும் வல்லமை கொண்டவை! 📚
(பாரதி பதிப்பகம்)
Comments
Post a Comment