கவிஞர் பா.விஜய்யின் சிந்தனைச் சிறகுகள்

______________________________
கவிஞர் பா.விஜய்யின் சிந்தனைச் சிறகுகள்
_______________________________
      வாழ்க்கையை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பாடம்.ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொரு ஞானம்.
      நல்ல சிந்தனைகளைத் தழுவி வாழ்வதுதான் தமிழர் வாழ்வு.அதுதான் உயர்ந்த வாழ்வு.
     கவிஞரின் இந்நூலை வாசிப்பவர், அவர் எழுத்துகளில் பளிச்சிடுகின்ற சிந்தனைக் கீற்றுகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.
      சோர்ந்து போய்விடாமல் சிகரங்களை நோக்கிய பயணத்திற்கு நம்மை அழைத்துச்செல்லும் ஆற்றல் உடையவை இக்கவிதைகள்.
"சொல்லிக் கொண்டிருக்கும் போதே
செய்து விடு..
மற்றவர்கள் உன்னைச்
சொல்லிக் கொண்டிருப்பார்கள் "
என்று உழைப்பைப் பற்றியும்,
"விழுந்து கிடப்பதை விட
எழுந்து நடப்பதே மேல் "
என்று தன்னம்பிக்கை பற்றியும் கவிஞர் பல்வேறு கோணங்களில் பார்வைகளைப் பதிவு செய்துள்ளார்.
            (விலை : ரூ 70) 
            (குமரன் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்