கொடிமுல்லை(வாணிதாசன்)

_________________________
கொடிமுல்லை
(வாணிதாசன்)
_________________________
        இயற்கை அழகை வெளிப்படுத்தவும், செந்தமிழின் செழிப்பை உணர்த்தவுமே கொடிமுல்லை படைக்கப்பட்டது!
        பகுத்தறிவுப் பார்வையோடு இக்காவியம் தொடங்குகிறது! உவமை, கற்பனை எனும் உத்திகளை நயம்படக் கையாண்டுள்ளார் கவிஞர்!
      பொருள் புரியும் வார்த்தைகள், வினாவிடை முயற்சிகள், நகைச்சுவையுடன் சாடுவது, சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் போன்ற நடையமைப்பினை இக்காவியத்தில் காணலாம்!
       காப்பியத்தலைவி காப்பியத் தலைவனைவிடக் கூர்ந்த அறிவுடையவராகவும், செயல்திறம் மிக்கவராகவும் படைத்திருப்பது பெண்களை முதன்மைப்படுத்துவது கவிஞரின் விருப்பம் என்பது தெளிவாகத் தெரியும்!!
      "கொடிமுல்லை "வாசகர்களை வாசத்தால் தன்வயமாக்கும் "வாசமுல்லை "📚
                  (விலை : ரூ 30)
                  (சாரதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்