இளந்திரையன் கவிதைகள் - சாலை இளந்திரையன்
____________________________
இளந்திரையன் கவிதைகள்
(சாலை இளந்திரையன்)
____________________________
தமிழகத்தின் பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகளில் சிலவற்றின் தொகுப்பே இந்நூல்.
சுமார் 128 கவிதைகள் உள்ளன.வாழ்த்து, இயற்கை, அன்பு வாழ்க்கை, குமுறல், மலர்த்தோட்டம் என்ற தலைப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.
இவர் கவிதைகள்.. எண்ணத்தின் பண்..
இதயத்தின் இசை..
உணர்வின் வடிவம்..
உண்மையின் உருவம்..
பல்சுவைப் பாடல்கள் பரவிக் கிடக்கும் நூல்..அவற்றில் சில கள்..சில கனித்தேன்..சில பால்..சில பாகு...
பகலவன் வரவால் தாமரையின் செயல்..
" சோம்பல் முறித்தது தாமரை
சுந்தரப்பள்ளி
எழுச்சி இசைத்தது நீரலை "
எல்லா பாடல்களுமே இணையில்லாச் சுவை மிக்கவை .அதை வாசிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
(யுனிவர்ஸல் பிரிண்டிங் ஹவுஸ்)
Comments
Post a Comment