பட்டத்து யானை - வேல.ராமமூர்த்தி
__________________________________
பட்டத்து யானை
(வேல.ராமமூர்த்தி)
___________________________________
பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீரவரலாறுதான் இந்நூல்.
வெள்ளையர்களுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவன் சித்திரங்குடி மயிலப்பன். அவன் துரதிஷ்டமாக, அவர்களுக்கு எதிரான போரில் இறந்து விடுகிறான்.
"வீரர்கள் புதைக்கப்படுவதில்லை...
விதைக்கப்படுகிறார்கள்..."
என்பதற்கிணங்க முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மாவீரன்.
இளைஞர்களை, படை சேர்த்து.. பயிற்சியளித்து .. பிரிட்டிஷ் படையைச் சூறையாடுகிறான்.
பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நேரடியாக மோதும்போது யார் வென்றி பெறுகிறார்கள் என்பதை வீரம் மிக்க நடையில் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
இக்கதை ஜீ.வி யில் வெளிவந்தபோது பரபரப்பாக பேசப்பட்டது.
(விலை : ரூ 380)
(டிஸ்கவரி புக் பேலஸ்)
Comments
Post a Comment