கழுத்தில் விழுந்த மாலை - லட்சுமி

கழுத்தில் விழுந்த மாலை
(லட்சுமி)
___________
      இக்கதையின் நாயகி மாதங்கி தன் பெரியம்மா பெண் ஜயந்தியின் கழுத்தில் விழ இருந்த மணமாலை, அவள் திடீரென காணாமல் போனதால் இவள் கழுத்தில் வந்து விழுகிறது.
     கைப்பிடித்த கணவன் ஹர்ஷனால் கண்கலங்க வைக்கப்படும் மாதங்கி .. பெங்களூர் செல்கிறாள்.தன் பத்தாம்பசலித்தனமான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு,
பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணாக மாறுகிறாள்.
       இறுதியில் ஹர்ஷன் தம் தவறை உணர்ந்து, தன் தோல்வியை அவளிடம் ஒப்புக் கொள்கிறான்.
      நல்ல கதாபாத்திரங்கள், அவை சம்பந்தப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்கள், அன்றாடம் நாம் நம் குடும்பங்களில் நடத்தும் உரையாடல்கள் எல்லாம் இக்கதையைப் படிப்பவர்கள் யாரானாலும் அவர்போல் இதில் ஒரு கதாபாத்திரம்
அமைந்திருப்பதை அவரால் உணர முடியும்.
                    (விலை : ரூ 80)
                    (பூங்கொடி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்