நில் கவனி தாக்கு

நில்  கவனி  தாக்கு
(சுஜாதா)
________________________________
         1970 களில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அமைந்த கதை.இன்றைய சூழலுக்கும் பெரிதும் பொருந்துவது ஆச்சரியம்.
        முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இப்புதினம், டெல்லியில் ஒரு அணு விஞ்ஞானி கடத்தப்படும் சம்பவத்தில் தொடங்கி, அடிதடி, ரத்தம், சத்தம், சாகசம் என்று பரபரப்பாகி, எதிர்பாராத ஆச்சரியத்தில் முடிகிறது.
       கதை முழுவதும் இரண்டு நாட்களில் நடக்கிறது. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.சிட்டாய் பறக்கின்றன பக்கங்கள்.ஒரு மணி நேரத்தில் வாசித்து முடித்து விடலாம். 
         புதினத்தின் வேகமும், துள்ளல் எழுத்தும் 50 ஆண்டுகளாகியும், இப்போதும் படிப்பவரை தன்வசம் ஈக்கும்.
                 (விலை : ரூ 75)
                 (கிழக்கு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்