பிரேம கீதம்(அநுத்தமா)
__________________________________
பிரேம கீதம்
(அநுத்தமா)
__________________________________
அன்பின் அருளினால்தான் இவ்வுலகமே இயங்குகிறது. அன்பே உருவான சில பிறவிகள் சில குடும்பங்களில் வாழ்வதால் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் புகழ் மங்காமல் அக்குடும்பங்கள் திகழ்கின்றன.
அத்தகைய பிறவி குடும்பத்தின் மூத்த மருமகள் "விசாலாட்சி "..
அவளால்தான் அக்குடும்பம் சிறப்புறுகிறது.
அன்பை அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் இரண்டாவது மருமகள் "அபிதா "..அன்பே சுரக்காத மூன்றாவது தம்பதி "பாலுவும், மீனுவும்".. வக்கிரப் புத்திக்காரனான நான்காவது மகன் "முரளி "யை கலாவின் அன்பு மாற்றுகிறது. ஐந்தாவது மகன் தாய் இருந்தும் தாயன்பு கிட்டமால் தவிப்பவன்.
எல்லோரையும் அன்பால் ஒன்றுபடுத்தி வேற்றுமைகளை புறந்தள்ளி ஒற்றுமையுடன் வாழ வழி சொல்லும் விசாலாட்சி பாத்திரப்படைப்பு அற்புதம்..
(விலை : ரூ 160)
(அல்லயன்ஸ் கம்பெனி)
Comments
Post a Comment